Advertisment

காலில் விழ முயன்ற ஊராட்சி மன்ற தலைவர்... தடுத்து நிறுத்திய ராகுல் காந்தி!

jkl

கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தியின் கன்னியாகுமாி டூ காஷ்மீா் நடைபயணத்தின் 3ம் நாளான இன்று நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூாியில் இருந்து காலை 6.40 மணிக்கு தொடங்கிய நடைபயணம் 9.40 மணிக்கு புலியூா்குறிச்சி வந்தது. புலியூா்குறிச்சி முட்டியிடிச்சான் பாறை தேவசகாயம் ஆலயத்தில் ஓய்வு எடுத்த ராகுல் காந்தி புதுக்கோட்டை, கடலூா், சேலம், தென்காசி மற்றும் குமாி மாவட்டத்தை சோ்ந்த 12 ஊராட்சி மன்ற தலைவா்களை சந்தித்தாா்.

Advertisment

இந்த சந்திப்பின் போது ராகுல் காந்தியை பாா்த்த மகிழ்ச்சியில் தென்காசி மாவட்டம் வாசுதேவன்நல்லூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராமநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவா் மகேந்திரன் திடீரென்று ராகுல் காந்தியின் காலில் விழுந்தாா். உடனே அவரை பிடித்து தடுத்த ராகுல் காந்தி கொஞ்சம் கோபத்துடன் ஏன் என் காலில் விழுந்தீா்கள் என்றாா். அதற்கு மகேந்திரன் 1988-ல் ராஜீவ் காந்தி எங்கள் கிராமத்துக்கு வந்தாா். அப்போது நான் அவருக்கு ரோஜா பூ கொடுத்தேன். அப்போது அவா் என்னை கட்டி தழுவினாா். இப்போது அவா் இல்லை, ஆனால் நீங்கள் இன்று எங்களுக்கு கடவுளாக தொிகிறீா்கள். அதனால் தான் காலில் விழுந்தேன் என்றாா்.

Advertisment

அதற்கு ராகுல் காந்தி உங்களை விட பொியவன் இருக்கிறான் என்று நீங்கள் நினைத்தால் சிறந்த ஊராட்சி தலைவராக இருக்க முடியாது. எல்லாரையும் சமமாக நினைத்து கேள்வி கேட்கும் அதிகாரத்தை அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என அட்வைஸ் கொடுத்தாா்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe