Skip to main content

ஊராட்சிக் குழுக் கூட்டம்! ‘ஆட்சியர் எங்கே?’ கேள்வி எழுப்பிய உறுப்பினர்! ‘அவசியமில்லை’ என்ற தலைவர்! 

Published on 02/03/2022 | Edited on 02/03/2022

 

Panchayat Committee Meeting! Member who asked ‘Where is the Collector?’! The leader of ‘not necessarily’!

 

கடலூர் மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம், மன்ற கட்டடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திருமாறன் தலைமை தாங்கினார். மாவட்டத் திட்டக்குழுச் செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். 

 

கூட்டத்தில் பேசிய ம.தி.மு.க உறுப்பினர் கந்தசாமி, தி.மு.க உறுப்பினர் சக்திவிநாயகம் ஆகியோர், "மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டும் எந்தப் பணிகளும் நடக்கவில்லை. இதை எந்த அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. பள்ளிக்கூடங்களில் சேதமடைந்த கட்டடங்கள் இடித்து, அதன் பிறகு புதிய கட்டடங்கள் கட்டப்படவில்லை. இதனால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

 

இதற்கு பதில் அளித்து பேசிய மாவட்ட ஊராட்சித் தலைவர் திருமாறன், "மாவட்ட ஊராட்சியில் போதிய நிதி இல்லை. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் நிதி கேட்டு இருக்கிறோம். வந்ததும் பள்ளிக்கூடங்களுக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

 

பா.ம.க உறுப்பினர் சண்.முத்துகிருஷ்ணன் பேசுகையில், "மாவட்ட ஆட்சியர், மாவட்ட கவுன்சில் கூட்டத்துக்கு வருவதில்லை. அவர் வந்தால்தான் மற்ற அதிகாரிகளும் வருவார்கள். அதன்மூலம் மக்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படும். என்.எல்.சி நிறுவனத்திற்காக மேலும் 10 கிராமங்கள் முழுமையாக கைப்பற்றப்பட உள்ளதால் அவர்களுக்கான முழுமையான இழப்பீட்டை உறுதிப்படுத்த வேண்டும்" என்றார். 

 

அதற்கு பதில் அளித்த மாவட்ட ஊராட்சித் தலைவர், "மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அவர் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும், மாவட்டத் திட்டக்குழுக் கூட்டத்தில் மட்டுமே அவர் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவித்துவிட்டார்" என்று கூறினார். 

 

பா.ம.க கவுன்சிலர் தமிழரசி பேசுகையில், "உக்ரைன் போரினால் பாதிக்கப்படும் இந்தியர்களை விரைந்து அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்த வேண்டும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.