அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையவிருப்பதாக பேசப்பட்டது.
ADVERTISEMENT
இந்நிலையில், ‘’நான் தி.மு.க.வில் இணைய திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. நான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காலத்தில் இருந்து அ.தி.மு.க.வின் உண்மை தொண்டனாக இருந்து வருகிறேன். அதன் பின் அ.தி.மு.க.வை சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் வழி நடத்த முடியும் என்கின்ற நம்பிக்கையில் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அ.ம.மு.க. கட்சியில் சிறப்பாக பணியாற்றுவதால் அதனை பொறுத்து கொள்ளாத சிலர் என் மீது கலங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் உளவுத்துறை உதவியுடன் இது போன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதை யாரும் நம்ப வேண்டாம்’’என்று தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments