Skip to main content

பழனியில் முடி காணிக்கைக்கு லஞ்சம்; தரிசனம் செய்வதில் இடைத்தரகர்களின் ஆதிக்கம்

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

palani murugan temple intermediate agent issue 

 

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் குடமுழுக்கு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான  பக்தர்கள் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று தைப்பூச தேர்த் திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தினமும் ஏறத்தாழ 10 ஆயிரம் பக்தர்கள் பழனிக்கு வருகிறார்கள். தற்போது குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ளாதவர்கள் தைப்பூச நாளில் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் பழனி நகரம் முழுவதும்  பக்தர்கள் கூட்டத்தால் திணறியது.

 

பழனி அடிவாரத்தில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் இடம் கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு முடி காணிக்கை செலுத்துவது முற்றிலும் இலவசம். ஆனால் இங்கு மொட்டை அடிப்பவர்கள் ஒரு ஆளுக்கு 50 ரூபாய் தந்தால் தான் மொட்டை அடிப்போம் என அடாவடியாகப் பேசுவதாக பக்தர்களிடம் இருந்து புகார் எழுந்துள்ளது. வசதியானவர்களாக இருந்தால் 200 ரூபாய், 300 ரூபாய் தர வேண்டும் என முன்கூட்டியே பேசிக்கொண்ட பின்பே மொட்டை அடிக்கிறார்கள் என்கிறார்கள். லஞ்சம் வாங்குவது சட்டப்படி தவறு. லஞ்சம் கேட்டால் புகார் சொல்லுங்கள் என அங்கு தொலைபேசி எண்ணை குறிப்பிட்டுள்ளது கோவில் நிர்வாகம். இதுகுறித்து புகார் சொல்ல யாராவது போன் செய்தாலும் எடுப்பதில்லையாம். கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர் மொட்டை அடிக்க வரும் பக்தர்களுக்கு டோக்கன் வழங்குகிறார். இதனை அவர் கண்காணித்து அதிகாரிகளிடம் கூறவேண்டும், அவர்களும் கூறுவதில்லை என்கிறார்கள் பக்தர்கள்.

 

பழனி கோவிலுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்களைப் போல அதிக அளவில் கேரளாவைச் சேர்ந்த பக்தர்களும் வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மொட்டை அடித்துக்கொள்ள கட்டணம் செலுத்த வேண்டும் என்றே நினைத்துக் கொள்கின்றனர். அப்படிப்பட்டவர்களிடம் கூடுதலாகவே பணம் வசூலிக்கின்றனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் மட்டும் அல்லாமல் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்யச் செல்லும் பக்தர்களிடமும் அங்குள்ள இடைத்தரகர்கள் வேகமாக தரிசனம் செய்ய வைக்கிறோம் எனச் சொல்லி குறுக்கு வழியில் அழைத்துச் சென்று அதிக அளவில் பணம் வாங்கிக் கொண்டு சுவாமி தரிசனம் செய்ய வைக்கிறார்கள் எனக் குற்றம் சாட்டுகிறார்கள் பழனிக்கு சென்று வரும் பக்தர்கள். இதனால் கோவிலுக்கு வர வேண்டிய வருமானம் வராமல் போகிறது என்கிறார்கள் முருக பக்தர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.