Palani Murugan Temple Immersion Ceremony; SMS to 2000 Devotees

வருகின்ற 27 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற இருக்கிறது. மலை மீது நடைபெறும் குடமுழுக்கு விழாவில் 6,000 பக்தர்கள் கலந்து கொள்ள கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து இணைய வழியாக ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். இதில் முதற்கட்டமாக 2,000 பேருக்கான அனுமதிக்கான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. வரும் 25ஆம் தேதிக்குள் குறுஞ்செய்தி பெறப்பட்டவர்கள் பழனி அடிவாரத்தில் உள்ள தேவஸ்தான அலுவலகத்தில் குறுஞ்செய்தியை காண்பித்து அனுமதி அட்டையைபெற்றுக்கொள்ள வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment