Skip to main content

பழனி எம்.எல்.ஏ. இ.பி.செந்தில்குமார் கரோனா தொற்றிலிருந்து குணமடைய திமுக தொண்டர்கள் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை

Published on 14/08/2020 | Edited on 14/08/2020
I.P.Senthil Kumar

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். திமுக மாநில துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி கடந்த மார்ச் மாதம் கரோனா தொற்று தொடங்கியதில் இருந்து, இன்று வரை ஆத்தூர் தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம் வழங்குதல், கையுறை, சானிடைசர் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கினார். இதுதவிர திமுக நிர்வாகிகள் கிராமம் கிராமமாக சென்று உணவு பொருட்களை வழங்க உத்தரவிட்டார். 

 

dmk

 

 

இதுபோல திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினருமான இ.பெ.செந்தில்குமார் பழனி மற்றும் கொடைக்கானல் பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆகஸ்ட் 7ம் தேதி கலைஞரின் நினைவு தினம் அன்று இ.பெ.செந்தில்குமார் ஏழை, எளிய மக்களுக்கும், மருத்துவமனைக்கும் சென்று நோயாளிகள் மற்றும் செவிலியர்களுக்கு போர்வைகள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

 

dmk

 

இதுபோல அவரது துணைவியார் மெர்சி செந்தில்குமார் சீலப்பாடி பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைதொடர்ந்து அவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த செய்தி கேள்விப்பட்டவுடன் திமுக தொண்டர்கள் கோவில்களுக்கு சென்று இ.பெ.செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பூரண குணமடைய பல்வேறு பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர். 

 

பழனியில் இளைஞரணி நிர்வாகிகள் கார்த்திக், அய்யப்பன் ஆகியோர் முடி காணிக்கை செலுத்தி வழிபாடு செய்தனர். இதில் பழனி முன்னாள் நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாஸ்கரன் தலைமையில் இ.பெ.செந்தில்குமார் பூரண குணமடைய சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

 

dmk

 

இதுபோல ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கே.புதுக்கோட்டை ரமேஷ் தலைமையில் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.நாகலட்சுமி மற்றும் திமுக இளைஞரணி நிர்வாகிகள் சிவபுரியில் உள்ள ஸ்படிக லிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆத்தூர் மற்றும் பழனி சட்டமன்ற தொகுதியில் நூற்றுக்கணக்கான கோவில்களில் திமுகவினர் இ.பெ.செந்தில்குமார் பூரண குணமடைய வழிபாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பழனி முருகன் கோவிலுக்கு நாட்டுச் சர்க்கரை கொள்முதல்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Procurement of native sugar for Palani Murugan temple

பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச் சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்க சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1,610 மூட்டைகள் நாட்டுச் சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.அதில், 60 கிலோ எடையிலான ஒரு மூட்டை, முதல் தரம், குறைந்தபட்ச விலையாக ரூ. 2,570க்கும், அதிகபட்சமாக ரூ. 2,600க்கும் விற்பனையானது. சராசரி விலையாக ரூ. 2,580க்கு விற்பனையானது.

இரண்டாம் தரம், குறைந்தபட்ச விலையாக ஒரு மூட்டை ரூ. 2,510க்கும், அதிகபட்சமாக ரூ. 2,520க்கும், சராசரி விலையாக ரூ. 2,520க்கும் விற்பனையானது.இதில், மொத்தம் 85 ஆயிரத்து 20 கிலோ எடையிலான 1,417 நாட்டுச் சர்க்கரை மூட்டைகள் விற்பனையாகின.இதன் விற்பனை மதிப்பு ரூ. 36 லட்சத்து 16 ஆயிரத்து 300 ஆகும் என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Next Story

பாலியல் புகார்; பாஜக மாவட்ட முன்னாள் செயலாளர் கைது!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
dindigul palani bjp district secretary issue

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே சாமிநாதபுரத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத்திட்ட ஒருங்கிணைப்பாளராக பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணியின் கணவரும், திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளரான மகுடீஸ்வரன் காலை உணவுத்திட்ட பணிகளை ஆய்வு செய்வதாக கூறி அங்கு வந்துள்ளார்.

அச்சமயத்தில் மகுடீஸ்வரன் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளரிடம் எத்தனை குழந்தைகளுக்கு சமைக்கிறாய் என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அந்த பெண் 35 பேருக்கு என்று சொல்லியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து நான் சமையல் அறையை பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து, சமையல் அறைக்கு அழைத்து சென்று இருக்கிறார். அப்போது திடீரென சமையல் ரூமின் கதவை அடைத்த போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளர் நான் ரூமை திறந்து தான் வைப்பேன் என்று கூறியிருக்கிறார். மது போதையில் இருந்த மகுடீஸ்வரன் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அதைக்கண்டு பாஜக மாவட்ட செயலாளார் மகுடீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். 

இது சம்பந்தமாக காலை உணவுத்திட்ட பெண் ஒருங்கிணைப்பாளர் சாமிநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் மகுடீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த விசயம் காட்டுத்தீ போல் பாஜக மாநில பொறுப்பாளர்களுக்கும் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் தெரியவே மகுடீஸ்வரனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பதாகவும், கட்சியினர் யாரும் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டாமென்றும், மாவட்ட தலைவர் கனகராஜ்  உடனடியாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் மங்களூரில் தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர். பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்செயன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சாமிநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதன்பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.