Skip to main content

பழனி பஞ்சாமிர்தம் விற்பனையில் செக்யூரிட்டிகள் மோசடி!!

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

பழனி முருகனை தரிசிக்க வரும் முருக பக்தர்கள், பழநிக்கு பெயர்போன பஞ்சாமிர்தத்தை பிரசாதமாக வாங்கிச் செல்வது வழக்கம். அதற்காகவே பழனி தேவஸ்தானம் மூலமாக மலைக்கோயில் அடிவாரம், ரோப் கார் , சண்முகநதி பஸ் ஸ்டாண்ட் உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் பஞ்சாமிர்தம் ஸ்டால்களை தேவஸ்தானம் மூலமாக வைக்கப்பட்டு அதன் மூலமாக முருக பக்தர்கள் பிரசாதத்தை வாங்கிச் சென்று வருகிறார்கள்.
 

palani issue


இப்படி முருக பக்தர்கள் வாங்கிச் செல்லும் பஞ்சாமிர்த விற்பனை நிலையங்களில் பில் வழங்குவதில்லை. அதோடு அங்குள்ள செக்யூரிட்டிகள் கூடுதல் விலைக்கு பஞ்சாமிர்தத்தை விற்று மோசடி செய்வதாக பழனியை சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்துள்ளார்.         

இதுசம்பந்தமாக பழனியை சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் கூறும்போது, "பழனி முருகன் கோவில் சார்பில் பிரசாதமாக பஞ்சாமிர்த டப்பா அரை கிலோ 35 ரூபாய்க்கும் 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதற்கு பில் தரவேண்டும், ஆனால் தனியார் நிறுவன செக்யூரிட்டிகள் தருவதில்லை. கூடுதல் விலைக்கு விற்று ஊழல் செய்கின்றனர்.
 

palani issue


எங்களது அமைப்பை சேர்ந்த வெளிமாநில பக்தர்கள் பஞ்சாமிர்த வாங்கும்போது பில் தராமல் 35 ரூபாய் விலைக்கு ஆறு பாட்டில்கள் வாங்கினர். அதற்கு 300 ரூபாய் பணம் வசூலித்து உள்ளனர். இதுதொடர்பாக இணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன். மேலும் தைப்பூசம் சபரிமலை, பங்குனி உத்தரம் நேரத்தில் வெளியூர் பக்தர்களை செக்யூரிட்டிகள் ஏமாற்றி பஞ்சாமிர்தத்தை கூடுதல் விலைக்கு விற்று வருமானம் பார்க்கின்றனர்.  

அவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பதி கோவில், சபரிமலை ஐயப்பன் கோவில் போல் பஞ்சாமிருதம் வாங்கும் முருக பக்தர்களுக்கு கம்ப்யூட்டர் பில் கண்டிப்பாக வழங்க வேண்டும்" என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பழனி முருகன் கோவிலுக்கு நாட்டுச் சர்க்கரை கொள்முதல்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Procurement of native sugar for Palani Murugan temple

பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச் சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்க சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1,610 மூட்டைகள் நாட்டுச் சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.அதில், 60 கிலோ எடையிலான ஒரு மூட்டை, முதல் தரம், குறைந்தபட்ச விலையாக ரூ. 2,570க்கும், அதிகபட்சமாக ரூ. 2,600க்கும் விற்பனையானது. சராசரி விலையாக ரூ. 2,580க்கு விற்பனையானது.

இரண்டாம் தரம், குறைந்தபட்ச விலையாக ஒரு மூட்டை ரூ. 2,510க்கும், அதிகபட்சமாக ரூ. 2,520க்கும், சராசரி விலையாக ரூ. 2,520க்கும் விற்பனையானது.இதில், மொத்தம் 85 ஆயிரத்து 20 கிலோ எடையிலான 1,417 நாட்டுச் சர்க்கரை மூட்டைகள் விற்பனையாகின.இதன் விற்பனை மதிப்பு ரூ. 36 லட்சத்து 16 ஆயிரத்து 300 ஆகும் என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Next Story

பாலியல் புகார்; பாஜக மாவட்ட முன்னாள் செயலாளர் கைது!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
dindigul palani bjp district secretary issue

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே சாமிநாதபுரத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத்திட்ட ஒருங்கிணைப்பாளராக பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணியின் கணவரும், திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளரான மகுடீஸ்வரன் காலை உணவுத்திட்ட பணிகளை ஆய்வு செய்வதாக கூறி அங்கு வந்துள்ளார்.

அச்சமயத்தில் மகுடீஸ்வரன் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளரிடம் எத்தனை குழந்தைகளுக்கு சமைக்கிறாய் என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அந்த பெண் 35 பேருக்கு என்று சொல்லியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து நான் சமையல் அறையை பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து, சமையல் அறைக்கு அழைத்து சென்று இருக்கிறார். அப்போது திடீரென சமையல் ரூமின் கதவை அடைத்த போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளர் நான் ரூமை திறந்து தான் வைப்பேன் என்று கூறியிருக்கிறார். மது போதையில் இருந்த மகுடீஸ்வரன் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அதைக்கண்டு பாஜக மாவட்ட செயலாளார் மகுடீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். 

இது சம்பந்தமாக காலை உணவுத்திட்ட பெண் ஒருங்கிணைப்பாளர் சாமிநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் மகுடீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த விசயம் காட்டுத்தீ போல் பாஜக மாநில பொறுப்பாளர்களுக்கும் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் தெரியவே மகுடீஸ்வரனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பதாகவும், கட்சியினர் யாரும் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டாமென்றும், மாவட்ட தலைவர் கனகராஜ்  உடனடியாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் மங்களூரில் தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர். பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்செயன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சாமிநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதன்பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.