Painting competition announcement for school students 

Advertisment

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசின் அருங்காட்சியகங்கள் துறை சார்பில் பள்ளி மாணவா்களுக்கான ஓவியப் போட்டி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை அரசு அருங்காட்சியகத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை நினைவுகூறும் வகையில் சென்னை மாநகரில் உள்ள பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஓவியப்போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு பிரிவிற்கும் ஓவியத்தில் திறன் பெற்றுள்ள ஒரு மாணவரை அனுப்பிவைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதில் பங்கு கொள்ளும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் சிறந்த ஓவியத்திற்கு பரிசுகள் வழங்கப்படும். சிறந்த ஓவியங்கள் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு கண்காட்சியாக வைக்கப்பட உள்ளது. இதற்கு செப்டம்பர் 8 ஆம் தேதி (08.09.2023) மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஓவியப் போட்டி செப்டம்பர்9 ஆம் தேதி (09.09.2023) அன்று காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை அருங்காட்சியக வளாகத்தில் நடத்தப்பட உள்ளது.

Advertisment

4,5 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவியப்போட்டிக்கான தலைப்பு இயற்கை காட்சிகளுடன் தமிழக நினைவுச் சின்னம் அல்லது அருங்காட்சியக அரும் பொருட்கள் ஏதாவது ஒன்றின் ஓவியம். 7,8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவியப்போட்டிக்கான தலைப்பு நான் விரும்பும் தமிழக பெண் சுதந்திரப் போராட்ட வீரர் அல்லது திருக்குறளுடன் அதற்கு உண்டான பொருளுடன் ஓவியம் (குரள் ஓவியம்) 10.11 மற்றும் 12 தமிழ்நாட்டு பண்பாட்டுடன் அருங்காட்சியகத் தொடர்பு குரல் ஓவியம் அல்லது திருக்குறளுடன் அதற்கு உண்டான பொருளுடன் ஓவியம் (குரள் ஓவியம்) தலைப்பாக வழங்கப்படும்.

ஓவியப் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள், ஓவியம் வரைவதற்கான ஓவியத்தாள் அருங்காட்சியகத்தில் வழங்கப்படும். ஓவியம் வரைவதற்கான பென்சில்கள், வண்ணங்கள் மற்றும் இதர பொருட்களை மாணவர்களே கொண்டு வர வேண்டும். மாணவர்கள் உடன் தண்ணீர் பாட்டில்கள் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் வயதிற்கான அடையாள அட்டை உடன் வைத்திருக்க வேண்டும். ஓவியம் வரையும்போது செல்போன் பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது. முதலில் பதிவு செய்யும் நூறு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இது குறித்த விபரங்களுக்கு 04428193238, 9443526604 மற்றும் 9489228435 என்ற தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் [email protected] என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.