Skip to main content

பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி அறிவிப்பு

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

Painting competition announcement for school students 

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசின் அருங்காட்சியகங்கள் துறை சார்பில் பள்ளி மாணவா்களுக்கான ஓவியப் போட்டி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.

 

இது குறித்து அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை அரசு அருங்காட்சியகத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை நினைவுகூறும் வகையில் சென்னை மாநகரில் உள்ள பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஓவியப்போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு பிரிவிற்கும் ஓவியத்தில் திறன் பெற்றுள்ள ஒரு மாணவரை அனுப்பிவைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

இதில் பங்கு கொள்ளும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் சிறந்த ஓவியத்திற்கு பரிசுகள் வழங்கப்படும். சிறந்த ஓவியங்கள் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு கண்காட்சியாக வைக்கப்பட உள்ளது. இதற்கு செப்டம்பர் 8 ஆம் தேதி (08.09.2023) மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஓவியப் போட்டி செப்டம்பர் 9 ஆம் தேதி  (09.09.2023) அன்று  காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை அருங்காட்சியக வளாகத்தில் நடத்தப்பட உள்ளது.

 

4,5 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவியப்போட்டிக்கான தலைப்பு இயற்கை காட்சிகளுடன் தமிழக நினைவுச் சின்னம் அல்லது அருங்காட்சியக அரும் பொருட்கள் ஏதாவது ஒன்றின் ஓவியம். 7,8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவியப்போட்டிக்கான தலைப்பு நான் விரும்பும் தமிழக பெண் சுதந்திரப் போராட்ட வீரர் அல்லது திருக்குறளுடன் அதற்கு உண்டான பொருளுடன் ஓவியம் (குரள் ஓவியம்) 10.11 மற்றும் 12 தமிழ்நாட்டு பண்பாட்டுடன் அருங்காட்சியகத் தொடர்பு குரல் ஓவியம் அல்லது  திருக்குறளுடன் அதற்கு உண்டான பொருளுடன் ஓவியம் (குரள் ஓவியம்) தலைப்பாக வழங்கப்படும்.

 

ஓவியப் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள், ஓவியம் வரைவதற்கான ஓவியத்தாள் அருங்காட்சியகத்தில் வழங்கப்படும். ஓவியம் வரைவதற்கான பென்சில்கள், வண்ணங்கள் மற்றும் இதர பொருட்களை மாணவர்களே கொண்டு வர வேண்டும். மாணவர்கள் உடன் தண்ணீர் பாட்டில்கள் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் வயதிற்கான அடையாள அட்டை உடன் வைத்திருக்க வேண்டும். ஓவியம் வரையும்போது செல்போன் பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது. முதலில் பதிவு செய்யும் நூறு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இது குறித்த விபரங்களுக்கு  04428193238, 9443526604 மற்றும் 9489228435 என்ற தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் govtmuse@tn.gov.in என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கலைஞர் சிலை திறப்பு விழா; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Minister Anbil Mahesh invites kalaignar Statue Unveiling Ceremony in trichy

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மணப்பாறையில் இன்று (01-03-24) முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு, கலைஞரின் உருவச்சிலையை  திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘தி.மு.க தலைவரின் அறிவுறுத்தலின்படி, கலைஞர் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இதன் அடிப்படையில் இதுவரை 90 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 91-வது நிகழ்ச்சியானது, கலைஞர் நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் மணப்பாறை தொகுதியில் இன்று (01-03-24) மாலை 3.30 மணிக்கு மணப்பாறை மாட்டுச்சந்தை அருகில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவச் சிலையைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைக்க உள்ளார். இந்த விழா கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு முன்னிலையிலும், எனது தலைமையிலும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, ஒன்றிய நகர, பேரூர் கழக சேர்மன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சட்டமன்றப் பேரவைத் தலைவர் தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா (படங்கள்)

Published on 27/02/2024 | Edited on 27/02/2024

 

 

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில், சென்னை, காமராஜர் சாலை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 10.00 மணியளவில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் "சட்டமன்ற நாயகர் - கலைஞர்" நூற்றாண்டு விழாவில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.