Skip to main content

நெல் கொள்முதல் செய்ய விவசாயியிடம் லஞ்சம் பெற்ற ஊழியர் கைது

Published on 24/02/2023 | Edited on 24/02/2023

 

Paddy procurement employee arrested for taking bribe from farmer

 

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகில் சாத்தமங்கலம் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் ரகுமான் என்பவர் எழுத்தராகவும் தியாகராஜன் என்பவர் லாரிக்கு லோடு ஏற்றும் தலைமை தொழிலாளியாகவும் வேலை செய்து வருகிறார்கள். இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் அப்பகுதியைச் சுற்றிலும் உள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில் பூதங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முகுந்தன் என்பவர் தனது வயலில் அறுவடை செய்த சுமார் 450 மூட்டை நெல்லை விற்பனை செய்வதற்காக மேற்படி சாத்தமங்கலம் நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்கு எடுத்துச் சென்றுள்ளார். எடை போட்டு லாரிக்கு லோடு ஏற்றும் தலைமை தொழிலாளி தியாகராஜன் எழுத்தர் ரகுமான் இருவரும் எடை போடுவதற்கு ஒரு மூட்டை ஒன்றுக்கு 55 ரூபாய் வீதம் மொத்தம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று எழுத்தர் ரகுமானும் லோடு மேன் தியாகராஜனும் கேட்டுள்ளனர். தான் மழையிலும் வெயிலிலும் கடுமையாக உழைத்து விளைய வைத்த நெல்லை அரசு கொள்முதல் செய்வதற்கு இவர்களுக்கு ஏன் கமிஷனாக 25 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கோபமடைந்த முகுந்தன் இது குறித்து கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளார்.

 

அவரது புகாரை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் முகுந்தனிடம் ரசாயனம் தடவப்பட்ட லஞ்ச பணம் 25 ஆயிரம் ரூபாயை சம்பந்தப்பட்டவர்களிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி நேற்று லஞ்சப் பணத்தை எடுத்துக்கொண்டு கொள்முதல் நிலையத்திற்குச் சென்ற முகுந்தன்., தலைமை லோடுமேன் தியாகராஜனிடம் அந்த பணத்தை வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன், இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் தியாகராஜனை கையும் களவுமாகப் பிடித்தனர். கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக எழுத்தர் ரகுமானும் லோடுமேன் தியாகராஜன் இருவரையும் கைது செய்த போலீசார் சிதம்பரம் வேளாண் மண்டல அலுவலகத்தில் வைத்து அவர்கள் இருவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்பு கைது செய்யப்பட்டு அவர்கள் இருவரையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.