Skip to main content

மழையில் நனைந்த நெல் மூட்டைகள்: கண்ணீர் மல்க ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த விவசாயிகள்!

Published on 14/07/2021 | Edited on 14/07/2021

 

Paddy bundles soaked in rain: Farmers in tears

 

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைய வைத்த நெல்லை அறுவடை செய்து விற்பனைக்காக அரசின் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வைத்துள்ளனர். அந்த நெல் மூட்டைகளைக் நாட்கணக்கில், மாதக்கணக்கில் எடைபோட்டு விலைக்கு எடுத்துக்கொள்ளாததால், அவை மழையில் நனைந்து வீணாகின்றன. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கள் நிலத்தில் விளைவித்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யக் கோரியும் மழையில் நனையாமல் பாதுகாப்பதற்கு வழிவகை செய்யுமாறும் கூறி நாம் தமிழர் கட்சி உட்பட பல்வேறு விவசாயிகள், விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

 

உதாரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏ.குமாரமங்கலம் இந்திலி நாகலூர், தேவபாண்டலம், பகண்டை கூட்ரோடு, பாதாரம் பள்ளம், சிறுநாவலூர் உட்பட பல்வேறு இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுவதில் காலதாமதம் செய்ததால், அங்கு விவசாயிகள் குவித்து வைத்துள்ள நெல் மழையில் நனைந்து முளைத்துவிடுகின்றன. இதனால் அதை வியாபாரிகள் வாங்க மறுக்கிறார்கள். இதனால் விவசாயிகள் நஷ்டத்தில் கண்ணீர் வடிக்கின்றனர். எனவே விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை உடனடியாக எடை போட்டு எடுத்துக் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்ய காலதாமதம் ஏற்படும்போது நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறி நேற்று (13.07.2021) நைனார்பாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூட நெல் கொள்முதல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினர் உட்பட பல்வேறு விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

 

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 2020 - 21 ஆண்டுகளில் தற்போதுவரை 3,112 விவசாயிகளிடமிருந்து 16,358 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டுவரும் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மேலும், நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாப்பதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக குறிப்பிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டதுபோல விவசாயிகளின் நெல்லை மழையில் நனையவிடாமல் உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கண்ணீரோடு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.