Skip to main content

150 ரூபாய்க்கு தொகுப்பு காய்கறிகள் விற்பனை! பொது மக்கள் மகிழ்ச்சி!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

 

தேனி புதிய பஸ் நிலையத்தில் தற்காலிகமாக செயல்படுத்தப்படும் உழவர் சந்தையில் 150 ரூபாய்க்கு காய்கறி தொகுப்பு விற்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

கரோனா பாதிப்பை தவிர்க்க மத்திய மாநில அரசுகள் 144 மற்றும் கட்டாய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தொற்று நோயானது மனிதர்கள் மூலம் பரவுவதால் மனிதர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதன்படி மனிதர்கள் தங்களுக்குள் மூன்று அடி இடைவெளியில் கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

 

vegetables



 

இந்த ஊரடங்கு அமலில் இருப்பதால் காய்கறி கடைகள், மளிகை கடைகள், பால் விற்பனை கடைகள் திறந்திருக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் திரண்டு வரும் நிலை உள்ளது. இதனால் சமூக இடைவெளியானது குறையும் நிலை உள்ளது. எனவே சமூக இடைவெளியை ஏற்படுத்தும் வகையில் நெருக்கடியான காய்கறிகளை பஸ் நிலையங்கள் விளையாட்டு மைதானங்கள் மாற்றப்பட்டு வருகிறது.
 

இந்த நிலையில் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவின்பேரில், தேனி உழவர் சந்தை பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு அங்கு காய்கறி விற்பனை நடந்து வருகிறது. ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் அதிக இடைவெளி இருப்பதோடு, காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்களும் இடைவெளி விட்டு நிற்க போதிய இட வசதி இருப்பதால் பொது மக்களிடையே பெரும் வரவேற்பு பெறப்பட்டுள்ளது. 

 

theni district collector


 

அதோடு தேனி உழவர் சந்தையில் காய்கறி விற்பனை என்பது விவசாயிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தவிர்க்கும் வகையில் மாவட்ட கலெக்டர் பல்லவி பலதேவ்  ஒரு அதிரடி  முடிவு செய்தார். உழவர் சந்தை நிர்வாகமே காய்கறி தொகுப்பினை பையில் வைத்து விற்பனை செய்ய வலியுறுத்தினார். அதன்படி காய்கறி தொகுப்பு ரூபாய் 150க்கு விலை நிர்ணயிக்கப்பட்டு காய்கறிகள் விற்க்கப்பட்டு வருகிறது. இந்த காய்கறி தொகுப்பில் கத்தரிக்காய் அரை கிலோ, தக்காளி ஒரு கிலோ, வெண்டைக்காய் கால் கிலோ, அவரைக்காய் அரை கிலோ, முருங்கைக்காய் நான்கு, பச்சை மிளகாய் கால் கிலோ, பீன்ஸ் கால் கிலோ, கேரட் கால் கிலோ, சவ்சவ் ஒன்று, உருளைக்கிழங்கு அரை கிலோ, சின்ன வெங்காயம் கால் கிலோ, பல்லாரி வெங்காயம் அரை கிலோ. கருவேப்பிலை, புதினா, கொத்தமல்லி ஒரு கொத்து, கீரை ஒரு கட்டு, முள்ளங்கி கால் கிலோ, வாழக்காய் 3, எலுமிச்சை 4, ஆகியவை உள்ளிட்டவற்றை தொகுப்பு காய்கறிகள் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைக்கண்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு  பெற்றதுடன் மட்டும்மல்லாமல் ஆவலுடன் இந்த தொகுப்பு காய்கறிகளை வாங்கி சென்று வருகிறார்கள்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.