Skip to main content

மத்திய பட்ஜெட்டில் கஜா புயல் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை என்றால் போராட்டம்-ப.சிதம்பரம் பேச்சு

Published on 30/06/2019 | Edited on 30/06/2019

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி.க்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் பேருந்து நிலையம் அருகில் விழா பொதுமேடையில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன் உள்பட கூட்டணி கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டு பேசும் போது.. 

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று தமிழனுக்கு என்று ஒரு குணம் உண்டு என்பதை காட்டிவிட்டார்கள். அதற்காக அனைவரும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். தமிழ்நாட்டில் மிகப் பெரிய வெற்றியை பெற்றாலும் இந்திய அளவில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்ற வருத்தம் எல்லோருக்கும் உள்ளது. அந்த வருத்தத்தில் ராகுல் காந்தி பதவி விலகுவதாக அறிவித்தார். அவர் பதவி விலக கூடாது என நாங்கள் வலியுறுத்தியுள்ளோம், அவர்  பதவி விலகும் முடிவை கைவிடுவார் என நம்புகிறோம். 

pudukottai


மத்தியில் தற்போது ஒரு முரட்டு அரசாங்கம் அமைந்துள்ளது. அவர்கள் செயலில் பணிவோ கனிவோ இல்லை. பாஜக ஆட்சி அமைத்து இன்றுடன் 30 நாட்கள் ஆகிறது. அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் இந்தியை திணிக்க நினைத்தார்கள். அனைவரின் எதிர்ப்பிற்கு பின் மும்மொழி பாடத்திட்டத்தை தினிக்க நினைத்த போது தமிழகம் எச்சரித்தது. அதன் பின்பு அந்த கொள்கையை மாற்றி எழுதினார்கள். ஆனால் அதில் குளறுபடிகள் உள்ளன. மத்திய அரசு இந்தியையோ, மும்மொழி கொள்கையோ இன்னும் விட்டு விடவில்லை. தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து மொழி பேசுவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

ரயில் நிலையங்களில் இந்தியில் தான் பேச வேண்டும் என்று சொன்னார்கள். போராட்டம் என்று அறிவித்ததும் வாபஸ் பெற்றார்கள். இந்த 30 நாளில் அவர்கள் செய்தது அறிவிப்பும் வாபசும் தான். நீட் தேர்வு கடந்த ஆண்டு 2 மாணவர்களும், இந்த ஆண்டு 5 மாணவர்களை பலியானார்கள். தமிழர்கள் வரிப்பணத்தில் தமிழ்நாட்டில் கட்டபடும் மருத்துவ கல்லூரிகளில் தமிழர்களை சேர்ப்பதற்கு மத்திய அரசுக்கு என்ன பிரச்சனை. அவர்களுக்கு வேண்டுமானால் 10 சதவீதம் இடங்களை கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு தமிழ்நாட்டு கல்லூரிகளில் ஒதுக்கும் இடத்தை பிடிக்க நினைக்க கூடாது.  நீட் தேர்வு என்பது வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது. நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காது.

கஜா புயலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ஒன்றரை கோடி தென்னை மரங்கள் விழுந்துள்ளது. ஒரு கோடி மரங்களுக்கு மேல் சேதமடைந்துள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ. 15 ஆயிரம் கோடி நிவாரணம் வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டது. ஆனால் மத்திய அரசு ஆயிரத்தி 146 கோடிகளை மட்டும் கொடுத்திருக்கிறது. இது இடைக்கால நிதி பட்ஜெட்டில் மற்ற நிதி கிடைக்கும் என்றார்கள். ஜுலை 5 ம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் தமிழக அரசு கேட்ட கஜா புயல் பாதிப்பிற்காண முழு நிவாரண நிதியையும் ஒதுக்காவிட்டால் தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதற்கு மக்களும் தயாராக வேண்டும்.

பீகார் மாநிலத்தில் 140 குழந்தைகள் மூளை வீக்க காய்ச்சலில் இறந்துள்ளது. அங்கே 23 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்களே இல்லை. அங்குள்ள சிறப்பு மருத்துவமனையில் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் எந்த வசதியும் இல்லை என்பதை ஆய்வு அறிக்கைகள் சொல்கிறது. இறந்த குழந்தைகள் முதல் நாள் இரவில் உணவு கிடைக்காமல் பட்டினியால் லிச்சிப் பழம் சாப்பிட்டதால் அதிலிருந்த கிருமிகள் தான் குழந்தைகளை பாதித்துள்ளது என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். அதில் 80 சதவீதம் குழந்தைகளின் பெற்றோர் மாதம் வருமானம் ரூ. 6 ஆயிரம் கூட இல்லாதவர்கள் என்பது தான் வேதனை. இந்த நாட்டில் ஏழ்மை ஒழிந்து விட்டதா என்றால் இல்லை. 

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு உள்ளது. எனினும் வருங்காலங்களில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்து சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்றார். 

 

 

pudukottai


தொடர்ந்து பேசிய கார்த்தி சிதம்பரம் எம்.பி…  தமிழகத்தில் 37 இடங்களில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அமைத்த கூட்டணி தான் காரணம். தமிழர்களை மதிக்கின்ற கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்ற முடிவுக்கு தமிழக மக்கள் வந்துவிட்டனர். நாடாளுமன்றம் தொடங்கி 2 வாரங்கள் தான் ஆகிறது. ஆனால் மத்திய அரசின் செயல்பாடுகள் முரட்டுத்தனமாக உள்ளது. ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே மதம் என்ற கொள்கையை மத்திய அரசு கொண்டுவர  நினைக்கிறது. அதை ஒருபோதும் நான் உட்பட திமுக கூட்டணி எம்.பி. க்கள் விடமாட்டோம்.

குடிநீர் பிரச்சினை பற்றி ஆண்டுதோறும் நாம் விவாதிக்கிறோம். ஆனால் இதற்கான நிரந்தரத் திட்டங்களை நாம் வகுக்கவில்லை. குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண கனவுத் திட்டமான காவிரி குண்டாறு இணைப்பு திட்டம். அதனை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். மேலும் ஜூலை 5 ந் தேதி பட்ஜெட்டில் கஜா புயல் நிவாரணத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.