ADVERTISEMENT
திருப்பூரில் இருந்து கோவை வந்த ப.சிதம்பரம் உறவினர் சிவமூர்த்தி( பனியன் ஆலை அதிபர்) என்பவர் மாயமாகியுள்ளார். திருப்பூர் வடக்கு போலீஸ் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
ADVERTISEMENT
ப. சிதம்பரம் மனைவியான நளினி சிதம்பரத்தின் தங்கை மருமகன் சிவமூர்த்தி. திருப்பூர் ஊத்துக்குளி சாலை கருமாரம்பாளையம் பகுதியில் பனியன் ஆலை நடத்தி வரும் அவர் நேற்று காலை அலுவலகத்திற்கு செல்வதாக கூறி தனது வால்வோ காரை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். பின்னர் மதியத்திற்கு மேல் அவரது செல்போன் அனைத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாநகர காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Show comments