Skip to main content

ப.சிதம்பரத்தின் உறவினர் கடத்தப்பட்டு கொலை: 3 பேர் கைது

Published on 27/06/2018 | Edited on 27/06/2018
sivamoorthy

 

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் உறவினர் சிவமூர்த்தி என்பவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது சம்மந்தமாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் தங்கை மருமகன் சிவமூர்த்தி. திருப்பூர் ஊத்துக்குளி சாலை கருமாரம்பாளையம் பகுதியில் பனியன் ஆலை நடத்தி வரும் அவர் கடந்த 25ஆம் தேதி காலை அலுவலகத்திற்கு செல்வதாக கூறி தனது வால்வோ காரை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். பின்னர் மதியத்திற்கு மேல் அவரது செல்போன் அனைத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்பூர் மாநகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
 

இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிவமூர்த்தியை கொலை செய்து கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையில் வீசியதாக 3 பேரும் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், கெலவரப்பள்ளி அணையில் இருந்து சிவமூர்த்தியின் உடலை மீட்டனர். 

 

 

 

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சொகுசு கார் நின்றது. அப்போது ரோந்து வந்த போலீசார் அந்த காரை நெருங்கினர். போலீஸ் வாகனம் நெருங்கியதும், சொகுசு கார் பறந்தது. பின்தொடர்ந்த போலீசார் காரை மடக்கினர். காரில் இருந்த 3 பேரை விசாரித்துள்ளனர். அப்போது சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டபோதுதான், சிவமூர்த்தியை கடத்தி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து விமல், கவுதமன், மணிபாரதி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

ஆட்டோ ஓட்டுநரால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Auto driver arrested under POCSO Act for misbehaving with girl

சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் தொட்டிப்பெட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய  மகன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித் (27).  இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது  சிறுமியை ஆசை வார்த்தை கூறி, வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.   

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம்  தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர்கள்  கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் கோவிந்தராஜன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித்தை போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகிறார்.