Skip to main content

ப.சிதம்பரம் இருப்பது பூமிக்குதான் பாரம்! எடப்பாடி பழனிசாமி தாக்கு!!

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவர் ப.சிதம்பரம், அமைச்சராக இருந்தபோது தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அவர் இருப்பது இருப்பது பூமிக்குதான் பாரம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆக. 13) திறந்து வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்ததாவது:

 

admk

 

மேட்டூர் அணை நிரம்பியதால் மேற்கு மற்றும் கிழக்கு கால்வாய்கள் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. பகல் நேரம் என்பதால் இப்போது அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. ஆற்றில் படிப்படியாக தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும். கடைமடை விவசாயிகள் பயன்பெறும் வகையில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்படும். ஏரி, குளங்களை தூர் வாரும் பணிகளைக் கண்காணிக்க தனியாக ஐஏஎஸ் அதிகாரி பாலாஜி என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்து வருகிறார்.

இப்போது வாய்க்கால்களில் 26 ஆயிரம் கன அடி தண்ணீர்தான் போக முடியும். நாற்று நடவுக்கு இந்த தண்ணீர் போதுமானது. விவசாயிகளுக்குத் தேவையான நெல் விதைகள், உரம் உள்ளிட்ட இடு பொருள்கள் தயார் நிலையில் உள்ளன. கர்நாடகாவில் உள்ள நான்கு அணைகளும் நிரம்பி விட்டதால், தமிழகத்திற்குக் கூடுதலாக தண்ணீர் வரும். அதனால் நமக்குத் தேவையான அளவு தண்ணீர் கிடைக்கும். 

டெல்டா மாவட்ட கால்வாய்கள் அனைத்தும் மத்திய அரசின் அனுமதி பெற்று, கான்கிரீட் கால்வாய்களாக மாற்றப்படும். மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்திற்கு அமைச்சர்கள் செல்லவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தவறான தகவல்களை கூறியிருக்கிறார். கனமழை பெய்த அடுத்த நாளே, அமைச்சர் உதயகுமார் நீலகிரி மாவட்டத்திற்குச் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரணப்பணிகளை மேற்கொண்டுள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியில் இருந்து 10 கோடி ரூபாயில் நிவாரணப் பணிகள் செய்வதாக கூறியுள்ளார். அதில் என்ன நிவாரணம் செய்ய முடியும்? ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தார்? காவிரி பிரச்னையைத் தீர்த்து வைத்தாரா? தமிழகத்திற்கு வேறு திட்டங்கள் கொண்டு வந்தாரா? அவர் இருப்பது பூமிக்குதான் பாரம். 

விரைவில் நான் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அப்போது கால்நடை ஆராய்ச்சி, எரிசக்தித்துறை, மருத்துவம் உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சியைப் பார்வையிட்டு, அவற்றை தமிழகத்திற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளில் உள்ள நம் நாட்டு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்திற்கு நிறைய தொழிற்சாலைகள் கொண்டு வர முயற்சிக்கப்படும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி; திருச்சியில் தயாராகும் பொதுக்கூட்ட ஏற்பாடு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Edappadi who started the campaign; Organized public meeting in Trichy

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இன்று சேலத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதேநேரம் இன்று திருச்சியில் அதிமுக பரப்புரை பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுகவின் முதல் பரப்புரை கூட்டம் என்பதால், திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம், 1.30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்படும் எடப்பாடி பழனிச்சாமி மதியம், 3.30 மணியளவில் திருச்சியை வந்தடைகிறார். திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மாலை, 4.40 மணி அளவில் வண்ணாங்கோயில் பரப்புரை கூட்ட திடலுக்கு வருகிறார்.

கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்றிரவு, 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட பரப்புரை பொதுக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த, 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இந்த மேடையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர்  கிருஷ்ணசாமி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

Next Story

விஜய பிரபாகரனுக்கு எந்த தொகுதி; தேமுதிக அலுவலகம் வந்த எடப்பாடி

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Vijaya Prabhakaran in Virudhunagar; Edappadi came to the DMDK office

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக தான் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அறிவித்த நிலையில், அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி தற்போது வெளியிட்டார். இந்நிலையில் 18 இடங்களில் திமுக - அதிமுக நேரடியாக களத்தில் மோதவுள்ளது.

மேலும், அதிமுகவில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிக போட்டியிடும் திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. விருதுநகரில் தேமுதிக வேட்பாளராக விஜய பிரபாகரன் போட்டியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தேமுதிக அலுவலகம் உள்ள கோயம்பேட்டிற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, அங்கு விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அதிமுக முக்கிய நிர்வாகிகளும் வந்திருந்தனர்.