Skip to main content

அரசியலில் வழக்குகளும், சிறை வாசமும் வரும் காரணத்தால் பணிந்து விழும் ஜாதி அல்ல காங்கிரஸ் கட்சி- கே.எஸ்.அழகிரி பேட்டி!

Published on 05/09/2019 | Edited on 05/09/2019

குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் இல்ல திருமணம் விழாவுக்காக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று நாகர்கோவில் வந்தார். அவர் வேப்பமூடு சந்திப்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு குமரி மாவட்டத்தில் பல்கலைகழகம் அமைக்க வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் ஒரு கோடி கையெழுத்து வாங்கும் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.


பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, இலங்கையில் கூட்டாட்சி முறை இல்லாததால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுகிறார்கள். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க எவ்வளவு பணம் செலவழித்தார்கள் என்று பாஜகாவுக்கு தெரியும். இதனை அமலாக்கத்துறை, சிபிஐ கண்டுக்கொள்ளவில்லை.

p chidambaram case tamilnadu congress party president ks azhagiri press meet


 

இந்திய பொருளாதாரத்தில் சுனாமி அழிவு ஏற்பட்டுள்ளது. பணம் மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால், பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதை மோடி அரசு ஒத்துக்கொள்ளாமல் இருப்பது அதிசயம். பொருளாதாரத்தை மீட்க முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறிய கருத்துகளை ஏற்க மத்திய அரசு மறுத்துள்ளது. தவறான பொருளாதார கொள்கை இந்திய பொருளாதாரத்தை வீழ்த்தி விடும். இதனை மறைத்து மக்களை திசை திருப்பவே காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு போடுகிறது பாஜக.

p chidambaram case tamilnadu congress party president ks azhagiri press meet


அரசியலில் வழக்குகளும் சிறைவாசமும் வரும் காரணத்தால் பணிந்து விழும் ஜாதி அல்ல காங்கிரஸ் கட்சி. முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தது, அவர் பெயர் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே சிதம்பரம் மீது வழக்குகள் போடப்படுகிறது. ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே ரேசன் உள்ளிட்டவைகள் மாநில சுயாட்சியை பாதிக்கும். வடகிழக்கு மாநிலங்களில் இருந்து 20 லட்சம் பேர் தமிழகத்தில் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கான ரேசன் பொருட்களை மத்திய அரசு வழங்குமா? அல்லது மாநில அரசு வழங்குமா? 
 

தமிழகத்தில் இரண்டு முறை முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அது தொடர்பான வெள்ளை அறிக்கை தேவை. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குரல் மென்மையாக உள்ளதா என ஆராய்வது அமைச்சர் ஜெயக்குமாரின் வேலையா? அதிமுகவினர் மீது தான் எல்லா வழக்குகளும் உள்ளது. ஆனால் ஸ்டாலின் மீது ஒரு வழக்கு கூட இல்லை. அப்படி இருக்கையில் அவர் கைது பயத்தில் உள்ளார் என்று ஜெயக்குமார் உளறுகிறார் என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.