Skip to main content

புறப்படும் போது 400.. கைதாகும் போது 176 ... ப.சி.க்காக சொந்தத் தொகுதியில் கைதாகிய காங்கிரஸாரின் எண்ணிக்கை 

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

 

    ஐஎன்எஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாஜக அரசை  கண்டித்து தமிழகமெங்கும் , அந்தந்த மாவட்டத் தலை நகரங்களில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது தமிழக காங்கிரஸ் தலைமை.

 

c

 

 இது ப.சி.யின் சொந்தத் தொகுதியும், மாவட்டமுமான சிவகங்கை மாவட்டத்தில் பலத்த எதிர்ப்பார்ப்புக்களை உருவாக்கியிருந்தது.  இதற்காகவே காரைக்குடியில் ஏ.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி. தலைமையில்  250க்கும் அதிகமான போலீசாரை காவலுக்குப் பணித்திருந்தது.

 

c

 

 காலை 9 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் என அறிவிக்கப்பட்ட நிலையில் சாவகாசமாகவே காரைக்குடியிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட காங்கிரஸார் ஒன்று கூடினர். அதற்கு முன்னதாக காங்கிரஸ் அலுவலக வாசலில் தனித்தனிக் குழுக்களாக இருந்த காங்கிரஸார் தான்தோன்றித் தனமாக  மோடிக்கும்,  அமித்ஷாவிற்கும் எதிராக கோஷம் போட , கோஷம் போட்ட காங்கிரஸாரை நோக்கி போலீசாரும் பாய, அலுவலகத்திற்குள்ளே ஓடி ஒளிந்து விளையாடினர் கோஷம் போட்டவர்கள்.

 

c


   

ஒரு வழியாக 400க்கும் மேற்பட்ட காங்கிரஸார் ஒன்றிணைந்து மத்திய அரசிற்கு எதிராக கோஷம் போட்டவாறு பெரியார் சிலைக்கு முன்னேறினர். அங்கு தயாராக காத்திருந்தப் போலீசாரும் கைது என அறிவிக்க, இருக்கின்ற காங்கிரஸார் எங்கே சென்றார்களோ தெரியவில்லை.!! பாதிக்கு மேல் எஸ்கேப்..!! எனினும், மிச்சமிருக்கின்ற காங்கிரஸாரை கைது செய்து மண்டபத்திற்கு அனுப்பி, கைதின் எண்ணிக்கை 176 என அறிவித்தது காவல்துறை. 

 

   ப.சி.யின் சொந்த மாவட்டத்திலேயே மத்திய அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்தது  தான் ஹைலைட்டே.!!!
 

சார்ந்த செய்திகள்

Next Story

மோடி இன்னொரு நமஸ்தே ட்ரம்ப் நடத்துவாரா? -ப.சிதம்பரம் கேள்வி

Published on 01/10/2020 | Edited on 01/10/2020

 

congress senior leader, former union minister chidambaram tweet

 

 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பா.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில்,

 

"கரோனாவால் இறந்தோர் விவரங்களை இந்தியா, சீனா, ரஷ்ய நாடுகள் மறைக்கின்றன என ட்ரம்ப் பேசினார். அதிக காற்று மாசு ஏற்படுத்துவதாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். தனது நண்பர் ட்ரம்ப் கௌரவப்படுத்த இன்னொரு நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியை மோடி நடத்துவாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

Next Story

காங்கிரஸ் செயற்குழு பட்டியல் வெளியீடு!  ப.சிதம்பரத்தை அவமானப்படுத்தியுள்ள சோனியா காந்தி!

Published on 12/09/2020 | Edited on 12/09/2020
cccc

 

 

அகில இந்திய காங்கிரசின் செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலை புதிதாக மாற்றியமைத்திருக்கிறார் சோனியா காந்தி. இந்த மாற்றலில் காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை சோனியாகாந்தி அசிங்கப்படுத்தி விட்டதாக அவரது ஆதரவாளர்கள் கொந்தளிக்கின்றனர். 

 

அவர்களிடம் நாம் பேசியபோது, "காங்கிரஸில் 'வொர்க்கிங் கமிட்டி' என்கிற கட்சியின் செயற்குழுதான் அதிகாரமிக்கது. காங்கிரஸின் வலிமையான அமைப்பு என்பது இதுதான். செயற்குழுவின் புதிய பட்டியலில் 22 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் 15-தாவது இடத்தில் பிரியங்கா காந்தியும் 16-வது இடத்தில் ப.சிதம்பரத்தையும் பட்டியலிட்டிருக்கிறார் சோனியா. இதை விட அவரை யாரும் அவமானபடுத்திட முடியாது. 

 

இன்றைக்கு கட்சியிலுள்ள மூத்த தலைவர்களில் மோடி அரசை தைரியமாக எதிர்கொள்வதும் விமர்சிப்பதும் சிதம்பரம் தான். அவரைப் போய் 16-வது இடத்தில் வைத்திருப்பது தவறு. அதுவும் கட்சிக்குள் கடந்த வருடம் வந்த பிரியங்கா காந்திக்கு பிறகு சிதம்பரம் என்பதை எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை " என்கிறார்கள். 

 

செயற்குழு உறுப்பினர்களை நியமித்திருப்பதுப்போல பல்வேறு மாநிலங்களின் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களையும் மாற்றியமைத்திருக்கிறார் சோனியாகாந்தி. இதில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருந்த முகுல்வாஸ்னிக்கை மாற்றி விட்டு புதிய பொறுப்பாளராக தினேத் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, தமிழக எம்.பி. மாணிக்கம் தாகூரை தெலுங்கானா காங்கிரஸின் மேலிட பொறுப்பாளராக நியமித்துள்ளார் சோனியா.