Skip to main content

ஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம்: ப.சிதம்பரம் 

Published on 23/02/2019 | Edited on 23/02/2019

 

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருவான்மியூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.
 

அப்போது அவர், 31 சதவீத மக்கள்தான் நரேந்திர மோடிக்கு வாக்களித்தார்கள். 61 சதவீத மக்கள் நரேந்திர மோடிக்கு வாக்களிக்கவில்லை. இதனை அவர் மறந்தாலும், நாம் மறந்துவிடக் கூடாது. அவரை யாரும் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக தேர்ந்தெடுக்கவில்லை. அவருடைய கட்சிக்கு 282 இடங்கள் தந்தார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் 31 சதவீத வாக்குகள் பெற்று குறிப்பாக வடமாநிலங்களில் ஏழு மாநிலங்களில் பெரிய வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார்.

 

P. Chidambaram


தான் ஆட்சிக்கு வந்ததும் ஒரே மாதத்திலே பல்வேறு நாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணங்களை திரும்ப இந்தியாவுக்கு கொண்டு வந்து ஒவ்வொரு வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவதாக சொன்னாரா? இல்லையா? இளைஞர்களிடம் ஆட்சிக்கு வந்ததும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறேன் என்று சொன்னாரா? இல்லையா? இந்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்திருக்கிறார்கள். பக்கோடா செய்வது அருமையான வேலை என்று கண்டுபிடித்தவர் நரேந்திரமோடி. 
 

சொல்லாத ஒன்றை அவர் செய்தார். பிரதமர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் செய்தபோது, மணமதிப்பிழப்பு செய்வேன் என்று சொன்னாரா? சொல்லியிருந்தால் ஓட்டு போட்டியிருப்பீர்களா? 
 

ஜி.எஸ்.டி.யை எதிர்க்கிறோம் என்றார்கள். தேர்தலின்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி.யை முறியடிப்போம் என்றார்கள். ஜி.எஸ்.டி. வரியை முன்மொழிந்தது நான்தான். ஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம். உலகின் பல நாடுகளில் இந்த கொள்கை இருக்கிறது. இதனை இந்தியாவில் கொண்டுவர வேண்டும் என்று சொன்னது நான்தான். ஜி.எஸ்.டி. என்ற நல்ல கொள்கையை குரங்கு கையில் பூமாலை கொடுத்த மாதிரி இவர்கள் கையில் கொடுத்த பிறகு, அதனை சிதைத்து எத்தனை சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டது. முட்டாள்தனமான முடிவுகள். இந்திய பொருளாதாரத்தை பத்து ஆண்டுகளுக்கு பின்தள்ளிய மிகப்பெரிய குற்றத்தை செய்தது பாஜக அரசு. இவ்வாறு பேசினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மோடி இன்னொரு நமஸ்தே ட்ரம்ப் நடத்துவாரா? -ப.சிதம்பரம் கேள்வி

Published on 01/10/2020 | Edited on 01/10/2020

 

congress senior leader, former union minister chidambaram tweet

 

 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பா.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில்,

 

"கரோனாவால் இறந்தோர் விவரங்களை இந்தியா, சீனா, ரஷ்ய நாடுகள் மறைக்கின்றன என ட்ரம்ப் பேசினார். அதிக காற்று மாசு ஏற்படுத்துவதாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். தனது நண்பர் ட்ரம்ப் கௌரவப்படுத்த இன்னொரு நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியை மோடி நடத்துவாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

Next Story

காங்கிரஸ் செயற்குழு பட்டியல் வெளியீடு!  ப.சிதம்பரத்தை அவமானப்படுத்தியுள்ள சோனியா காந்தி!

Published on 12/09/2020 | Edited on 12/09/2020
cccc

 

 

அகில இந்திய காங்கிரசின் செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலை புதிதாக மாற்றியமைத்திருக்கிறார் சோனியா காந்தி. இந்த மாற்றலில் காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை சோனியாகாந்தி அசிங்கப்படுத்தி விட்டதாக அவரது ஆதரவாளர்கள் கொந்தளிக்கின்றனர். 

 

அவர்களிடம் நாம் பேசியபோது, "காங்கிரஸில் 'வொர்க்கிங் கமிட்டி' என்கிற கட்சியின் செயற்குழுதான் அதிகாரமிக்கது. காங்கிரஸின் வலிமையான அமைப்பு என்பது இதுதான். செயற்குழுவின் புதிய பட்டியலில் 22 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் 15-தாவது இடத்தில் பிரியங்கா காந்தியும் 16-வது இடத்தில் ப.சிதம்பரத்தையும் பட்டியலிட்டிருக்கிறார் சோனியா. இதை விட அவரை யாரும் அவமானபடுத்திட முடியாது. 

 

இன்றைக்கு கட்சியிலுள்ள மூத்த தலைவர்களில் மோடி அரசை தைரியமாக எதிர்கொள்வதும் விமர்சிப்பதும் சிதம்பரம் தான். அவரைப் போய் 16-வது இடத்தில் வைத்திருப்பது தவறு. அதுவும் கட்சிக்குள் கடந்த வருடம் வந்த பிரியங்கா காந்திக்கு பிறகு சிதம்பரம் என்பதை எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை " என்கிறார்கள். 

 

செயற்குழு உறுப்பினர்களை நியமித்திருப்பதுப்போல பல்வேறு மாநிலங்களின் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களையும் மாற்றியமைத்திருக்கிறார் சோனியாகாந்தி. இதில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருந்த முகுல்வாஸ்னிக்கை மாற்றி விட்டு புதிய பொறுப்பாளராக தினேத் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, தமிழக எம்.பி. மாணிக்கம் தாகூரை தெலுங்கானா காங்கிரஸின் மேலிட பொறுப்பாளராக நியமித்துள்ளார் சோனியா.