Advertisment

தமிழகத்துக்கு ரயிலில் மேலும் 27.6 டன் ஆக்சிஜன் வந்தது!

OXYGEN EXPRESS TRAINS CHENNAI

Advertisment

தமிழகத்தில் கரோனவால்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும்தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால் கரோனாதடுப்பு நடவடிக்கைகள்,கரோனாதடுப்பூசிபோடும் பணிகள் ஆகியவற்றைதமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, முழு ஊரடங்கை கடுமையாக்கும் வகையில் மாநிலம் முழுவதும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு ஆகியவை தொடர்ந்து அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் கரோனாதடுப்பு பணிகள், ஆக்சிஜன் விநியோகம், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர்வசதி உள்ளிட்டவை தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்திவருகிறார்.

இந்த நிலையில், ஆக்சிஜன்எக்ஸ்பிரஸ் திட்டத்தில் தமிழகத்துக்காகமேலும் 27.6 டன் ஆக்சிஜன் ரயிலில் கொண்டு வரப்பட்டது. ஒடிசாவில் இருந்து தலா 13.8 டன் ஆக்சிஜன் நிரப்பியஇரண்டு லாரிகள் ரயிலில் திருவள்ளூர் ரயில் நிலையம் வந்தன.

Advertisment

அதைத் தொடர்ந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ஒரு லாரியும், மதுரைக்கு ஒரு லாரியும் அனுப்பப்படுகிறது.

ஏற்கனவே, மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து 80 டன் ஆக்சிஜன் வந்த நிலையில், ஒடிசாவில் இருந்து 27.6 டன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

oxygen patients coronavirus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe