Skip to main content

ஆன்லைனில் மட்டுமே ஆக்சிஜன் படுக்கைகள்.. நிஜத்தில்..? சிக்கலில் நோயாளிகள்..!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021

 

Oxygen beds only online .. really ..? Patients in trouble ..!

 

கரோனா பெருந்தொற்றால் உயிருக்குப் போராடும் மக்களைக் காப்பாற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் போராடிவருகிறது. ஆனால் மக்களை ஏமாற்றும் விதமாக ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாத மருத்துவமனைகளிலும், ஆக்சிஜன் படுக்கைகள் இருப்பதாகக் கூறி உண்மைக்குப் புறம்பான தகவல்களை இணையதளத்தில் பதிவிட்டு, மக்களின் உயிருடன் சிவகங்கை மாவட்டக் மருத்துவத்துறை விளையாடுவதாக அம்மாவட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

 

கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையால் அனேகர் பாதிப்புக்குள்ளான வேளையில், பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை அமல்படுத்திய தமிழக அரசு, மக்களிடையே தனிமனித இடைவெளி, முகக் கவசம், சானிடைசர் பயன்பாடு, தடுப்பூசி உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது. இதேவேளையில், நோய்த் தொற்றுள்ள மக்களைக் காக்க தமிழகமெங்கும் மருத்துவமனைகளை முடுக்கிவிட்டு, "படுக்கைகளுக்காக அலைய வேண்டாம். எங்கெங்கு ஆக்சிஜன் படுக்கைகள் இருக்கிறது என்பதை இணைய வெளியில் வெளியிட்டுள்ளோம். அதனைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்" என இணைய முகவரியை வெளியிட்டது. எனினும், மக்களை ஏமாற்றும் விதமாக இங்கு ஆக்சிஜன் படுக்கைகள் இருக்கிறது என இணையவெளியில் தினசரி அப்லோட் செய்துவிட்டு, அங்கு சென்றால் இந்த வசதியே இங்கில்லை எனக்கூறி நோயாளிகளை அலையவிடும் சோகம் சிவகங்கை மாவட்டத்தில் அரங்கேறிவருகிறது.

 

Oxygen beds only online .. really ..? Patients in trouble ..!

 

கரோனா தொற்று நோயாளிகளுக்காக சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட தாலுகாக்களில் சிவகங்கை மருத்துவக் கல்லூரி, சிவகங்கை அரசு மருத்துவமனை, காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை, தேவக்கோட்டை அரசு மருத்துவமனை, திருப்புத்தூர் அரசு மருத்துவமனை, சுவீடிஷ் மருத்துவமனை, மானாமதுரை அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுமாக மொத்தம் மாவட்டத்தில் 1,300 ஆக்சிஜன் படுக்கைகளும், 1,700 சாதாரன படுக்கைகளும் உள்ளன. இதில் 24.05.2021 கணக்கீட்டின்படி இறப்பு 6 எனவும், சிகிச்சை முடிந்து நலம்பெற்று வீடு திரும்பியோர் 85 எனவும் சிகிச்சையிலுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 1,729 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இது இப்படியிருக்க இளையான்குடி பகுதி மக்களோ, "இளையான்குடியைச் சுற்றியுள்ள 55 கிராமத்திற்கும் ஒரே மருத்துவமனை இந்த இளையான்குடி அரசு மருத்துவமனையே. எங்க ஊர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா பாசிட்டிவ் வர, ஆக்சிஜன் படுக்கை வசதிக்காக இணையதளத்தில் தேடினால் அருகிலுள்ள இளையான்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதி இருப்பதாக அது தெரிவித்தது. அதனை நம்பி இங்கு வந்து பார்த்தால் ஆண்கள் பிரிவிற்கு 7 படுக்கை வசதிகளும், பெண்கள் பிரிவிற்கு 7 படுக்கை வசதிகளுடன் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் ஒரு படுக்கையும் உள்ளன. ஆனால் ஆக்சிஜன் படுக்கை என்பதே இங்கு கிடையாது. அங்கு கேட்டால் சரியான பதிலில்லை. அதற்கப்புறம் 33 கி.மீ தூரமுள்ள சிவகங்கை மருத்துவமனைக்கு வந்து சேர்க்க வேண்டியதாயிற்று. இதில் ஆக்சிஜனோடு ஆம்புலன்ஸ் கிடைக்க நாங்க பட்ட வேதனை சொல்லி மாளாது. தவறான தகவல்களை இணையத்தில் போட்டு எங்களை அலைக்கழிக்கிறது சிவகங்கை மாவட்ட மருத்துவத்துறை. இந்த தவறான தகவலால் காலதாமதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு..?" என கேள்வி எழுப்புகின்றனர்.

 

இளையான்குடி வாசிகளின் கூற்றை உறுதிசெய்யும் விதமாக படுக்கை வசதிகள் குறித்து மக்கள் அறிந்துகொள்ள தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இணையதள முகவரியில், இளையான்குடி அரசு மருத்துவமனையில் 37 ஆக்சிஜன் படுக்கைகள், திருப்புவனம் அரசு மருத்துவமனையில் 50 ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் சிங்கம்புணரி அரசு ஆக்சிஜன் படுக்கைகள் 45 காலியாக உள்ளதாக உண்மைக்கு மாறான தகவல்களை இணையதளம் தெரிவித்துள்ளது. ஏன் இந்தக் குழப்பம்..? என மருத்துவத்துறையிடம் கேள்வி எழுப்பினால், "அங்கெல்லாம் தயார் செய்துகொண்டிருக்கின்றோம். அதனால்தான் அங்கு படுக்கை இருப்பதாக பதிவிடப்பட்டுள்ளது" என பதில் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Tragedy happened to the girl who ate mana tuber

சிவகங்கை மாவட்டம், தமராக்கி பகுதியைச் சேர்ந்தவர் வன்னிமுத்து. இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். இந்த நிலையில், 13 வயதுள்ள மகள் சுவேதாவும், 10 வயது மகள் வனிதாவும் நேற்று (08-03-24) இரவு வீட்டில் மரவள்ளிக் கிழங்கை பச்சையாக சாப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, நள்ளிரவில் அவர்கள் உறங்கச் சென்றபோது உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுள்ளனர். அதில் உணவு செரிமானமாகாமல் சுவேதா வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, மற்றொரு மகளான வனிதாவை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.