Skip to main content

"போலீசார் பொய் வழக்கு போடுகிறார்கள்"- எஸ்.பி.யிடம் ஓட்டுனர்கள் நேரில் மனு ..

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஓட்டுனர்கள் இன்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பரிண்டன்ட் சக்திகணேசனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். பிறகு அவர்கள் வெளியே வந்து பத்திரிகையாளர்களிடம் பேசினார் "ஈரோடு மாவட்டத்தில் 550 தனியார் பஸ்கள், 175 மினி பஸ்கள், 2 ஆயிரத்து 390 ஆட்டோக்கள், 5 ஆயிரத்து 500 சுற்றுலா வாகனங்கள், 20 ஆயிரத்து 500 சரக்கு வாகனங்கள், 13 ஆயிரத்து 200 கனரக சரக்கு வாகனங்கள், 3 ஆயிரம் டிராக்டர்கள் என 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
 

owners association gives petition


இந்த வாகனங்களை சொந்தமாக, பெரும்பாலான டிரைவர்கள் சுயதொழிலாக சிறிய அளவில் முதலீடு செய்து வங்கிக்கடன் மூலமாக தொழில் நடத்தி வருகின்றனர். இதில் எங்களுக்கு பெரிதும் துன்பத்தை கொடுப்பது வாகன தணிக்கையின்போது போலீசார் உரிய ஆவணங்கள் இருந்தாலும், பொய் வழக்குப்பதிவு செய்து ஆயிரக்கனக்கில் அபராதம் விதிக்கின்றனர். இது எங்களுக்கு பெரிய சிரமத்தை ஏற்படுத்துகிறது.

போலீசாரின் வாகன தணிக்கையின்போது அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் பயணிகள் இருந்தாலும், கூடுதல் பயணிகள் இருந்ததைபோலவும், சரக்கு வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவு சரக்குகள் ஏற்றப்பட்டு இருந்தாலும் கூடுதல் சரக்குகள் ஏற்றப்பட்டு இருப்பதைபோலவும் வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதிக்கிறார்கள்.


இதேபோல் மெதுவாக சென்றாலும், அதிக வேகமாக வாகனங்களை இயக்குவதாக கூறி போலீசார் அபராதம் வசூலிக்கிறார்கள். மேலும், வாகனத்தின் உரிய ஆவணங்களின் நகல்கள் இருந்தாலும், அசல் ஆவணங்களை எடுத்து வர காலஅவகாசம் கொடுக்கப்படாமல் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இதன் காரணமாக டிரைவர்கள் மன உளைச்சலுக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே வாகன சோதனையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி.யிடம் கூறினோம்" என்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.