owdies hunting; Surrendered Sami Ravi

தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த 11 பேரில் திருவேங்கடம் என்ற ரவுடி போலீசார் விசாரணையின் பொழுது தப்பிக்க முயன்றதோடு பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட முயன்றதால் என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த என்கவுன்டர்ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் பிரபல ரவுடி சாமி ரவி சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராமஜெயம் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்று கூறப்படுபவரும், பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவராகவும் உள்ள சாமி ரவி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் ராக்கெட் ராஜா மீதுள்ள வழக்கு ஒன்றிற்காக காவல்துறை அழைத்து விசாரித்து அனுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.