Skip to main content

"நம்ம ஊரு, நம்ம முன்னேற்றம்" - முகநூல் முயற்சியாளர்கள்.

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

மனிதன் அன்றாட தேவையாக விளங்குவது தான் தண்ணீர். விவசாயம், உயிரிணங்களுக்கான வாழ்வியல் என அனைத்திலும் முதன்மை தேவையாக விளங்குவது தண்ணீர். தண்ணீரின்மையால் பல்வேறு கிராமங்கள் விவசாய நிலங்கள், விவசாயிகள் மற்றும் வளர்ப்புப் பிராணிகள் என அனைத்தும் அழிவின் விளிம்பில் உள்ள இச்சூழலில் இளைஞர்களாகிய நாம் ஒவ்வொரு நிமிடமும் சிந்தித்துப் பயணிக்க வேண்டியுள்ள கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இச்சூழலில் சமூகவலைதளங்களில் ஓர் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தன் கிராம மக்களுக்கு சேவை செய்யும் மனப்பக்குவம் அனைவருக்கும் வந்துவிடாது. ஆனால் அதை மிக எளிதாக முன்னெடுத்துச் சென்றுள்ளனர் முகநூல் பிரியர்கள்.
 

youth union

   

திண்டுககல் மாவட்டம் நிலக்கோட்டை அருகிலுள்ள ஜெயநாயக்கன்பட்டியில் இருபது வருடங்களுக்கு முன் விவசாயம் , கால்நடைகள் , நீர்நிலைகள் மற்றும் மக்களின் வருமானநிலை என அனைத்தும் உயர்ந்து காணப்பட்ட இக்கிராமத்தில் இன்று குடிநீருக்கே பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளன. இதனால் விவசாயம், கால்நடை என அனைத்தும் அழிவின் விழிம்பை நோக்கிச் சென்றுவிட்டது.ஊர் மக்கள் தங்கள் வருமானத்தைத் தேடி பெரும் நகரங்களுக்கு இடம் பெயர ஆரம்பித்துவிட்டனர். அச்சூழலில் தன் கிராமத்தை காக்க புயலன் திறன்ட இளைஞர்கள் தங்களின் விடாமுயற்சியால் பல்வேறு இன்னல்களை சந்தித்தாவது கிராமத்தை பழைய நிலைக்குக் கொண்டுவரவேண்டும் என்ற முயற்சியில் ஒரு முகநூல் அமைப்பை உருவாக்கினர்.

  

social workers

பள்ளிப்பயிலும் பருவத்தில் இருந்தே தன் கிராமத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் அனலாக பறக்க கிராம இளைஞர்கள் இணைந்து "நம்ம ஊரு, நம்ம முன்றேற்றம்", என்ற முகநூல் பக்கத்தை உருவாக்கி அதன் மூலம் தங்கள் பகுதியில் வாழும் மக்களுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகின்றது என்பதை ஆராய்ந்து அதற்காக செயல்பட தொடங்கினர்.


முதல் கட்டமாக தங்களுடைய பகுதியில் பெரும் பிரச்சனையாக திகழ்ந்த குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்தனர்.பொதுவாக நிலக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மாதம் ஒருமுறை குடிநீர் விநியோகம் இன்றும் வழங்கப்படுகின்றன.ஆனால் இந்த முகநூல் பிரியர்கள் தங்கள் முதல் முயற்சியை சொந்த ஊரிலேயே  நிறைவேற்ற எண்ணி  அனைத்து சமுதாய மக்களும் பயன்படும் வகையில் பொது இடத்தில் 20- க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்களை அமைத்து அதில் மாதம் மூன்று அல்லது நான்கு முறை குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது. 


அதுமட்டுமின்றி தங்கள் கிராமத்தில் வருங்கால தலைமுறையை நல்வழியில் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கிராம குழந்தைகளுக்கு சமூக உணர்வுகளுடன் கூடிய மாலைநேரப்பள்ளி என்ற ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படிப்பை வழங்கிவருகிறனர். மாதம் ஒரு முறை மாணவர்களுக்கு வருங்காலங்களில் என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் அதை தவிர்க்க நாம் என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றனர்.மாணவர்களுக்கு ஏற்ற கட்டமைப்புக் கொண்ட ஓர் இடத்தை ஏற்பாடு செய்து, அதைச்சுற்றிலும் மாணவர்கள் வளர்க்கப்பட்ட மரங்களே மாணவர்களின் முயற்சியை அடையாளப்படுத்துகின்றது. இவ்வமைப்பினர் தங்களுக்கான செலவினை தாங்களே பூர்த்திச்செய்து கொள்கின்றனர்.

 

சமூகவளைதளங்கள் மூலம் தங்களின் வாழ்க்கையை தொலைத்தவர்களுக்கு சவாலாக விளங்குகின்றனர். இது போன்ற சமூக போராளிகளின் முயற்சிகள் பல.
தன்னெழுச்சியாக முன்வந்து தொண்டாற்றும் இதுபோன்ற சமூக போராளிகளை நாமும் பாராட்டுவோம்.


பா.விக்னேஷ் பெருமாள்

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

காற்றில் பறக்கும் தேர்தல் விதிமுறை-நிலக்கோட்டையில் அதிகாரிகளின் மெத்தனம்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Is there an election? Or not?- Complacency of authorities in Nilakottai

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தொகுதியில் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் அலுவலகம் உள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று தேர்தல் தேதி அறிவித்தும் கூட இதுவரை சீல் வைக்கப்படவில்லை. எம்.எல்.ஏ தேன்மொழி ஆதரவாளர்கள் வழக்கம்போல்  சட்டமன்ற அலுவலகத்தை பூட்டிச் சென்ற பூட்டு மட்டுமே அங்கு காட்சிப் பொருளாக தொங்குகின்றதே தவிர தேர்தல் விதி முறைகளின்படி அந்த அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.

இதே போல் தொகுதி முழுவதும் கொடிக் கம்பங்கள் அகற்றப்படவில்லை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் சாலையில் வைத்துள்ள பேனர்கள் அப்படியே இருக்கிறது. தொகுதியில் தேர்தல் நடக்கிறதா? இல்லையா? என பொதுமக்கள் கேட்கும் அளவிற்கு அதிகாரிகளின் செயல்பாடு மெத்தனமாக உள்ளதாகக் குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.