2021 சட்டமன்றத் தேர்தல் குறித்து தனது கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். இந்த நிலையில், இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின்கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் தி.நகரில்உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
நம் கூட்டணி மக்களுடன் தான். கூட்டணி என்பது என் வேலை. வெற்றிக்கு எல்லோரும் உழைக்க வேண்டும். எனச் சென்னையில் நடைபெற்றுவரும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டகலந்துரையாடலில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் பேசியுள்ளார்.