Skip to main content

ஓயாத பிரச்சாரம்.. தீராத தண்ணீர் பஞ்சம்.. தவிக்கும் ஒட்டப்பிடாரம்...

Published on 12/05/2019 | Edited on 12/05/2019

அடிக்கும் சராசரி வெயிலின் அளவு 105 டிகிரி சென்டிகிரேடையும் தாண்டிவிட்டது தேர்தல் களமான ஓட்டப்பிடாரம். மேலேயும் இல்லாமல் கீழேயும் விழாமல் அந்தரத்தில் தொங்குகின்ற திரிசங்கு நிலை என்பார்களே அது போன்ற பரிதாப நிலையிலிருக்கிறது சுயநலமற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை உலகுக்கு தாரை வார்த்த ஒட்டப்பிடார பூமி.

 

ottapidaram election campaigning report

 

அ.தி.மு.க தரப்பில் ஒ.பி.எஸ்., இ.பி.எஸ். போன்றவர்களும், தி.மு.க.வின் ஸ்டாலின், அ.ம.மு.க.வின் டி.டி.வி.தினகரன் போன்ற தலைவர்கள் தங்களது முதல் ரவுண்ட் பிரச்சாரத்தை முடித்துவிட்டனர். ஆளும் இலைத் தரப்பு ஒட்டப்பிடார இடைத்தேர்தலை தங்களது பிராண மூச்சாக பார்க்கிறது. கடந்த தேர்தலில் 453 வாக்குகளில் வெற்றிவாய்ப்பை நூலிழையில் பறிகொடுத்த தி.மு.க.வோ எந்த வகையிலாவது கைப்பற்றிட வேண்டுமென்று குருசேத்திர யுத்தமே நடத்துகிறது. அ.தி.மு.க.வின் தரப்பில் எட்டு அமைச்சர்கள் முக்கிய புள்ளிகள் அவர்களின் ஆதரவாளர்களோடு பிரச்சார முற்றுகையில் இருக்கிறார்கள். அமைப்பாகச் செயல்படும் இவர்கள் தூத்துக்குடியிலிருக்கும் ஸ்டார் ஹோட்டல்களில் தங்கியவாறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் ஒட்டப்பிடாரத்தின் நிலை என்ன? சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை தொகுதிக்கென்று அத்தியாவசியத் தேவையான மருத்துவம், குடி தண்ணீர் போன்ற திட்டங்கள் கொண்டு வரப்படவில்லை. தனியார் மற்றும் அரசியல் புள்ளிகளால் அங்குள்ள நிலத்தடி நீர் ஆழ்குழாய் மூலம் எடுக்கப்பட்டு வியாபாராமாக்கப்படுவதால் நிலத்தடி நீர் 1000 அடிகளுக்கும் கீழ் போய்விட்டது என்கிறார்கள்.
 

ottapidaram election campaigning report

 

முறையான குடி தண்ணீர் வசதி கிடையாது தெருவோரப் பம்ப்களில் அதற்காகத் தவமிருக்கிறோம். முக்கியத் தேவைக்கான மருத்துவ வசதிக்கான அரசு மருத்துவமனை அமைக்கப்படவில்லை. இங்கே ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தவிர வேறு மேல் சிகிச்சைக்கு வழியில்லை என்கிறார்கள் தொகுதியின் முப்பிலிவெட்டியின் ஆறுமுகம், சுப்பு போன்றவர்கள்.

தவிக்கும் மக்களின் பிரச்சினை முடிவுக்கு வருமா என்பதே இவர்களின் எதிர்பார்ப்பு.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.