Skip to main content

 ஒட்டப்பிடாரம் வாக்குப் பதிவு நிலவரம்

Published on 19/05/2019 | Edited on 19/05/2019

 

257 வாக்குச்சாவடிகளைக் கொண்ட ஒட்டப்பிடாரத்தின் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு காலை நேரத்திலேயே விறுவிறுப்புடன் தொடங்கியது. பதற்றமான வாக்குச்சாவடிகள் சற்று அதிகம் என்பதால் தொகுதி முழுக்க சுமார் மூவாயிரம் போலீசார் தென்மண்டல ஜ.ஜி.யான சண்முக ரஜேஸ்வரனின் நேர் மேற்பார்வையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

 

o

 

வல்லநாடு கிராமத்தின் அரசுப் பள்ளியில் சுற்றுப்பட்டு கிராமத்தின் வாக்காளர்களுக்கான நான்கு வாக்கு சாவடிகள் உள்ளன. பதற்றமான வாக்குசாவடிகளில் 180 வது பூத் பிரச்சினைக்குரியது என்பதால் அங்கு கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு மாவட்ட எஸ்.பி.யான முரளி ரம்பாவின் கண்காணிப்பிலிருக்கிறது.

 

o

 

தொகுதியின் ஒரு சில இடங்களில்  வாக்குப்பதிவின் ஆரம்பத்தில் மின்னணு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுகள் உடனடியாக சரி செய்யப்பட்டு இயங்கின. குறுக்குச் சாலை அருகிலுள்ள வால சமுத்திரம், கிராம பூத்தில் ஆரம்பத்தில் வி.வி பேட் மக்கர் செய்யாததால் டெக்னீசியன் வரவழைக்கப்பட்டு சரிசெய்யப்பட்டது.

 

o

 

இதனால் அங்கு வாக்குப் பதிவு 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.  ஒட்டநத்தம் கிராம வாக்குச்சாவடியின் கண்டரோல் யூனிட் திடீரென்று ரிப்பேர் ஆனதால் பின்பு அது சரிசெய்யப்பட்டது. அங்கு வாக்குப்பதிவு ஒரு மணிநேரம் வரை தாமதமானது. ஆனாலும் மதியம் ஒரு மணி நேர நிலவரப்படி ஒட்டப்பிடாரத்தின் வாக்குப்பதிவு 45.06 சதவிகிதம்.

 

o


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.