Skip to main content

கோரிக்கை மனு தந்த ஒரு மணி நேரத்தில் ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியர்- கைகுழந்தையுடன் கண்ணீர் விட்ட பெண்!

Published on 09/12/2019 | Edited on 09/12/2019

வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு திருப்பத்தூர் மாவட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 28.11.19 அன்று தொடங்கி  வைத்தார். இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை முதல் மக்கள் குறை தீர்க்கும் நாள் நடைப்பெற்று வந்த நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து கடந்த வாரம் நடைபெற்ற முதல் குறை தீர்வு கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
 

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படி தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளகுறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் எனச்சொல்ல, அதன்படி தமிழக மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

The order was issued within one hour of the request tirupattur district collector

புதிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை என்பதால், மீண்டும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் தொடங்கியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், மாதனூர், நாட்றம்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் இன்று தற்காலிக ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் சிவனருளிடம் நேரடியாக கொடுத்தனர். 
 

திருப்பத்தூர் அடுத்த சின்னாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரகாசம் என்பவரது மனைவி செல்வி என்பவர் தனது எட்டு மாத கைக்குழந்தையுடன் வந்து மனு அளித்தார். அதில் தனது கணவர் ஒரு மாதத்திற்கு முன்பு விபத்தில் பலியாகினர். எனக்கு உதவி செய்ய யாரும் இல்லாததால் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுயிருந்தார். மனுவை வாங்கி படித்த மாவட்ட ஆட்சியர் சிவனருள், அந்த பெண்மணியை காத்திருக்க சொன்னார்.

உடனடியாக சமூக நலத்துறை அதிகாரிகளிடம் பேசி, அந்த பெண்ணிடம் உள்ள ஆவணங்களை வாங்கி ஆய்வு செய்தனர் அதிகாரிகள். அவர் வைத்திருந்த ஆவணங்கள் சரியாக இருந்ததை பார்த்து, உடனடியாக அந்தப் பெண்ணுக்கு உதவி தொகை வழங்க உத்தரவிட்டு ஆணையை வழங்கினார் மாவட்ட ஆட்சியர். கோரிக்கை மனு தந்த ஒரு மணி நேரத்தில் தனது பிரச்சனை தீர்ந்ததை தொடர்ந்து அந்த பெண் கண்ணீர் விட்டு அழுது, நன்றி தெரிவித்து ஆணையுடன் வீட்டுக்கு சென்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.