dam

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது சாத்தனூர் அணை. இந்த அணையின் மூலமாக இடது புற கால்வாய் மற்றும் வலது புற கால்வாய் மூலமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 7543 ஏக்கர் விவசாய நிலங்களும், விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் வட்டத்தில் 2500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சுமார் 10,050 ஏக்கர் விவசாய நிலங்கள் சாத்தனூர் அணை நீரை நம்பியுள்ளன.

இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் தற்போது கிணற்றில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. இதனால் சாத்தனூர் அணையை பாசனத்துக்காக திறக்க வேண்டும் என்கிற இடதுபுற, வலது புற பாசன கால்வாய் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வரும் 23.1.2019 முதல் 3.3.2019 வரை பாசனத்துக்காக விநாடிக்கு 150 முதல் 200 கனஅடி நீரை சாத்தனூர் அணையில் இருந்து திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அதேப்போல் திருக்கோவிலூர் அணையை நம்பியுள்ள விவசாயிகளுக்கு இரண்டாம் போகத்துக்காக 600 கன அடி நீரை பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை படிப்படியாக சாத்தனூர் அணையில் இருந்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.