ADVERTISEMENT

மதுரையில் சிதிலமடைந்த 200 பள்ளி கட்டடங்களை இடிக்க உத்தரவு!

09:50 AM Dec 18, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நெல்லையில் பொருட்காட்சித் திடல் அருகே எஸ்.என். ஹைரோடு பகுதியில் உள்ள டவுன் சாஃப்டர் தனியார் மேல்நிலைப் பள்ளியில், நேற்று (17.12.2021) மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை சுவர் இடிந்துவிழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் விவரங்களைப் பள்ளி நிர்வாகம் வெளியிட்டது. சுதீஸ் - 6ஆம் வகுப்பு 'சி' பிரிவு, விஷ்வரஞ்சன் - 8ஆம் வகுப்பு 'ஏ' பிரிவு, அன்பழகன் - 9ஆம் வகுப்பு 'பி' பிரிவு என மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், நிவாரணமும் அறிவித்துள்ளார். “இந்த துயர சம்பவத்தை அறிந்து மிகுந்த வேதனையுற்றேன். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கல்” என தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், காயமடைந்த 4 மாணவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணமும் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் இதுபோல் சிதிலமடைந்திருக்கும் பள்ளி கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டையில் உள்ள 325 பள்ளி கட்டடங்களில் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருக்கும் 100 பள்ளி கட்டடங்களை இடிக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். அதேபோல், மதுரையில் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருக்கும் 120 வகுப்பறை கட்டடங்கள், 80 கழிப்பறை கட்டடங்கள் என மொத்தம் 200 பள்ளி கட்டடங்களை இடிக்க மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT