style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டபொதுமக்கள் உணவு, குடிநீர், மின்சாரம்போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் ஆங்காங்கேசாலையில் ஒன்றுகூடி மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை ஏற்பட்ட புயல்சேதங்களில்சிக்கி 46 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்கள் கஜா புயலால்அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகளை மறு உத்தரவு வரும் வரை மூட வேண்டும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இயக்குனர் கிரலேஷ்குமார்உத்தரவிட்டுள்ளார்.