தொடரும் கனமழை; தமிழகத்திற்கு ‘ஆரஞ்ச்’அலர்ட்

Orange alert has been issued for Tamil Nadu due to heavy rain

மிகக் கனமழை பெய்யும் என்பதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை மிகக் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு நிற அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் நவம்பர் 6 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், நாளை(4.11.2023) மிகக் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மழையின் காரணமாக மாவட்ட நிர்வாகங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

rain weather
இதையும் படியுங்கள்
Subscribe