தமிழகத்தில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த அவரச சட்டம் பிறப்பிக்கப்பட்டு, அதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று (20/11/2019) வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து மேயர், மாநகராட்சி தலைவர், நகராட்சி தலைவர், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் பணத்தை திரும்ப பெறலாம் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/EJ36LbCVAAEgyr9.jpg)
மேலும் கட்டணம் செலுத்திய அசல் ரசீதுடன் வந்து அதிமுக தலைமையகத்தில் வரும் 25- ஆம் தேதி முதல் 29- ஆம் தேதிக்குள் பணத்தை திரும்பப் பெறலாம் என தெரிவித்துள்ளது. 24- ஆம் தேதி அதிமுக பொதுக்குழு முடிந்தவுடன் தாங்கள் செலுத்திய விண்ணப்ப கட்டண தொகையை பெறலாம் என்று தெரிவித்துள்ளது.
Follow Us