Skip to main content

ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமார் வேட்புமனு தாக்கல்!

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

தேனி நாடாளுமன்ற அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.

 

ops son

 

 

விருதுநகர் மாவட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகதோட்டத்தில் அமைந்திருக்கும் வனப்பேச்சியம்மன் கோவிலானது ஓ.பன்னீர்செல்வத்தின் குலதெய்வ கோவில். இன்று காலை, பெரியகுளத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற ரவீந்திரநாத்குமார், தனது குலதெய்வமான வனப்பேச்சியம்மனை வழிபட்டுவிட்டு நேராக தேனி வந்தார். தேனி பங்களாமேட்டில் இருந்து கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், கட்சிக்காரர்கள் புடைசூழ, தேனி கலெக்டர் அலுவலகம் அழைத்துவரப்பட்டார். ரவி உடன், ஓ.பன்னீர்செல்வம், வருவாய்துறை அமைச்சரும் தேனி நாடாளுமன்ற தேர்தல் அ.தி.மு.க பொறுப்பாளருமான ஆர்.பி.உதயகுமார், மாவட்டச்செயலாளர் சையதுகான், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்த அனைவரும், 100 மீட்டருக்கு அப்பால் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

 

 

ops son

 

 

ops son

 

கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், ரவியை அழைத்துக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்ய கலெக்டர் அலுவலகத்திற்குள் வந்தார். மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம், தேனி தொகுதி நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு,க சார்பில் போட்டியிட தனது மனுவை தாக்கல் செய்தார். இதே போல, அ.தி.மு.க பெரியகுளம் வேட்பாளர் மயில்வேல், மற்றும் ஆண்டிபட்டி அ.தி.மு.க வேட்பாளர் லோகிராஜன், அந்தந்த தாலுகா அலுவலகங்களில் மனு தாக்கல் செய்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.