இன்று (13.04.2021) தெலுங்கு வருடப்பிறப்பானயுகாதி நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ் யுகாதி நாளுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகஅவர், தனது டிவிட்டர்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''தெலுங்கு வருடப்பிறப்பாம் யுகாதி திருநாளை உவகையோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ‘யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை’அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் நாளை தமிழ்புத்தாண்டு கொண்டாடப்படஇருக்கும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். ''தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழ் பெருமக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். தமிழ் பெருமக்கள் பல்லாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். தமிழர்கள்வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும்,நலமும் வளமும்பெருகட்டும்'' என தெரிவித்துள்ளார்.