" ஓபிஎஸ்- பாணியில் தர்மயுத்தம்... அதிரடிக்குத் தயாரான மார்க்கண்டேயன்.!''

விளாத்திகுளம் இடைத்தேர்தலில் நமக்கு தான் 'சீட்' என்ற எதிர்பார்ப்பில் இருந்தார் மாஜி எம்.எல்.ஏவும், அதிமுக செய்தி தொடர்பாளருமான மார்க்கண்டேயன். ஆனால், வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை. இதற்கு காரணம் மந்திரியும் மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ தான் காரணம். மார்க்கண்டேயன் ஓபிஎஸ் ஆள் என்று இ.பி.எஸ் இடம் போட்டுக் கொடுத்து, தனது ஆதரவாளரான சின்னப்பனுக்கு சீட் வாங்கி கொடுத்துவிட்டார் கடம்பூர் ராஜூ.

publive-image

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இதனால், இந்த இடைத்தேர்தலில் தனது பலத்தை காட்ட மார்க்கண்டேயன் சுயேட்சையாக களம் இறங்க திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து, ஆலோசிக்க தனது ஆதரவாளர்களை அழைத்துள்ளார். பெரும்பாலும் இதுபோன்ற கூட்டங்கள் ரகசியமாக தான் நடக்கும். ஆனால், இவர் வெளிப்படையாக பேனர் வைத்து அழைப்பு விடுத்துள்ளார்.

publive-image

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அதில் "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை ஓபிஎஸ் பாணியில் தர்ம யுத்தம் நடத்துவாரோ என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.

admk elections markandeyan
இதையும் படியுங்கள்
Subscribe