Skip to main content

“30 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுகதான்” - ஓ.பி.எஸ்

Published on 29/08/2022 | Edited on 29/08/2022

 

ops said AIADMK only party that has ruled for 30 years

 

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவினர் ஓ.பி.எஸ் முன்னிலையில் இணைந்தனர்.

 

தேனி மாவட்டத்தில் உள்ள , பெரியகுளம் அருகே இருக்கும் கைலாசபட்டி ஓ.பி.எஸ் பண்ணை வீட்டில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வேடசந்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில், 500க்கும் மேற்பட்டோர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில்  சந்தித்து  சால்வை அணிவித்து  இணைந்தனர்.இதில் ஆத்தூர்  தொகுதியில் இருக்கும் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் பசும்பொன், பழனி  முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் சுப்புரத்தினம், நிலக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள்  உடன் இருந்தனர்

           

இதில் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசும் போது, “முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து கடந்த நான்கு ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்ததோடு, அதிமுக 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த உரிமை பெற்றிருக்கிறது. அதேபோல் நாடு சுதந்திரம் அடைந்த  பிறகு 30 ஆண்டு ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுகதான்,அந்த அளவுக்கு வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறோம். அதற்கு எம்.ஜி.ஆர் அவர்களும், ஜெயலலிதாவும் தான் காரணம். ஜெயலலிதா பொறுப்பேற்ற போது 15 லட்சமாக இருந்த தொண்டர்களின் இயக்கத்தை , கடந்த 30 ஆண்டுகளாக பொதுச் செயலாளராக இருந்து கொண்டு அத்தனை வேதனை சோதனைகளையும், எதிர்க்கட்சிகளில் அரசியல் சூழ்ச்சிகளையும், முறியடித்து இன்றைக்கு ஒன்றைக் கோடி தொண்டர்களின் இயக்கமாக அதிமுக இருக்கிறது. அதிமுகவினரை பொறுத்தவரை எந்த ஒரு வம்பு தும்புக்கும் போக மாட்டார்கள். அது போல் ஆட்சியில் இருந்தால் கூட அதிகாரமும் அதிகார துஷ்பிரயோகம் செய்ய மாட்டார்கள். அதனால் தான் கட்சி இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறது” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மலைக் கிராமங்களுக்கு குதிரை மூலம் வாக்கு பெட்டி அனுப்பி வைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் சாலை வசதி இல்லாத, போடி சட்டமன்ற தொகுதியிலிருந்து குதிரை மற்றும் கழுதை மூலம் வாக்கு பெட்டிகளை அனுப்பும் அவலம், கடந்த 40 ஆண்டு களாக நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறும் 18 வது மக்களவை உறுப்பினர் தேர்தலிலாவது எங்களுக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டுமென இப்பகுதி மலைக் கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்தியாவில் 18 வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில் தேனி மக்களவைத் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளுக்கு 40 வகையான உபகரணங்கள் கொண்ட பெட்டிகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியகுளம் பகுதியில் அகமலை, ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் போடி பகுதியில் கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன் சென்ட்ரல், கொழுக்குமலை, அண்ணாநகர் உள்ளிட்ட 10 மலைக் கிராமங்களுக்கும் வாக்குப்பட்டி அனுப்பும் பணி போடி தாலுகா அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட 40 உபகாரணங்கள் கொண்ட பொருள்கள் அனுப்பப்பட்டது.

குறிப்பாக தேனி பாராளுமன்ற தொகுதி, ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 315 வாக்குச்சாவடிகள் இருக்கிறது. இந்த நிலையில் இன்று வாக்குப்பட்டி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவுக்கு தேவையான 40 பொருட்கள் உள்ளடங்கிய உபகரணங்கள் உள்ளிட்டவைகளைத் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரவேல் தலைமையில் அனுப்பப்பட்டது. அதன்படி போடி தொகுதியில் உள்ள 10 மலைக் கிராமங்களுக்கு வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

மலைக் கிராமங்களான காரிப்பட்டி, கொட்டகுடி, குரங்கணி  அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாகவும் சென்ட்ரல் மற்றும் அகமது பகுதிகளுக்கு குதிரை மற்றும் கழுதை மூலமாகவும் வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பட்டி மதியம் 2 மணி அளவில் வாக்குப்பதிவு அலுவலர், வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் பி1 பி2 பி3 ஆகியோர்களுடன் வாக்குப்பட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் குதிரை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரில் சோதனை! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Former Minister R.P. Udayakumar car test

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் காரிலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தேர்தல் பரப்புரைக்காக தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கனூர், கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்தபோது இந்த சோதனை நடைபெற்றது. அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லபடுகிறதா என பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.