Skip to main content

நான் ஏன் தங்க.தமிழ்ச்செல்வன் கேள்விக்கு பதில் சொல்வதில்லை தெரியுமா? ஓ.பி.எஸ் எதிர்கேள்வி

Published on 19/07/2018 | Edited on 19/07/2018


நான் ஏன் தங்க.தமிழ்ச்செல்வன் கேள்விக்கு பதில் சொல்வதில்லை தெரியுமா? என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் எதிர்கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

மேட்டூர் அணை திறந்து விடப்பட்டுள்ளது. ஒரு வார காலமாகும் கடைமடை பகுதிக்கு நீர் செல்வதற்கு. நாகப்பட்டிணத்தில் தூர்வாரும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. 4-5 நாட்களில் அந்த பணிகள் முடிந்து விவசாயிகளுக்கு தங்குதடையின்றி காவிரி நீர் கிடைக்கும்.

 

 

வரி ஏய்ப்பு இருப்பதனால் தான் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சியிலும் எந்த ஆட்சி வந்தாலும் ஒப்பந்ததாரர் பணி செய்து வருகின்றனர். குறிப்பிட்ட கட்சியை சொல்வது தவறு. தங்க.தமிழ்ச்செல்வன் அவரது முதுகு பின்னால் உள்ள அழுக்கை பார்க்க வேண்டும். அவருடைய கேள்விக்கு பதிலை தவிர்த்தே வருகின்றேன்.

ஏனென்றால் அவர் உண்மை சொல்வதில்லை. நாடாளுமன்றத்தில் மத்திய அரசிற்கு எதிரான தீர்மானம் தொடர்பாக தலைமை கழகம் கூடி முதல்வர் சென்னை வந்தபின் நல்ல முடிவை அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்