Advertisment

'ஓபிஎஸ் ஒரு வெத்துவேட்டு'-சி.வி.சண்முகம் சாடல்  

'OPS Or Vethuvettu' - CV Shanmugam Chatal

Advertisment

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகளை அதிமுக முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், ''முதன் முதலாக ஒரு மத்திய கேபினட் அமைச்சரை பெற்றுத்தந்தது அதிமுக. பாண்டிச்சேரி நாடாளுமன்ற உறுப்பினரை அன்றைக்கு மத்தியில் கேபினட் அமைச்சராக முதன் முதலில் ஒரு மாநில கட்சிபெற்றுக் கொடுத்தது. அது இந்த பாண்டிச்சேரிக்கான பெருமை. அதிமுகவிற்கு அந்த உரிமையைபெற்றுக் கொடுத்த வீரமும் திறமையும் இருக்கிறது. இங்கு இருக்கின்ற காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் பாண்டிச்சேரி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லி இருக்கிறார். எங்கள் தலைமையில் சிறப்பான வெற்றி கூட்டணி அமைக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார். அது விரைவில் அறிவிக்கப்படும். தொகுதி பங்கீடு பற்றியோ, கூட்டணி பற்றியோ எங்களுடைய கழகப் பொதுச் செயலாளர் விரைவில் அறிவிப்பார். ஓபிஎஸ் என்பவர் ஒரு வெத்துவேட்டு. அவருடைய சகாப்தம் முடிந்து விட்டது. இன்றைக்கு அவர் பெருங்காய டப்பா சத்தம் போடுவது போல் போட்டுக் கொண்டிருக்கிறார். அவர் சொல்வதை யாரும் காது கொடுத்து கேட்கத் தயாராக இல்லை'' என்றார்.

admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe