Skip to main content

பென்னிகுவிக்கின் பிறந்தநாள் விழா! மாட்டுவண்டியில் வந்து மரியாதை செலுத்திய ஓபிஎஸ்!!

Published on 16/01/2021 | Edited on 16/01/2021

 

ops joins pennycuick birthday function

 

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிக் கொடுத்த பென்னிகுவிக்கின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்  என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று நடைபெற்ற பென்னிகுவிக்கின் 180 ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

 

தென்மாவட்டங்களான திண்டுக்கல், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக முல்லைப் பெரியாறு அணை உள்ளது. இதனைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் யான் பென்னிகுவிக்கை தேனி மாவட்ட மக்கள் உள்பட ஐந்து மாவட்ட மக்களும் மரியாதைக்குரியவராகவே பார்க்கின்றனர். தங்கள் குழந்தைகளுக்கு பென்னிகுவிக் பெயரை வைப்பதோடு அவர்களுடைய தொழில் நிறுவனங்களுக்கு பென்னிகுவிக் பெயரை வைத்து தொழில் நடத்தி வருகின்றனர். அப்படிப்பட்ட பென்னிகுவிக் பிறந்தநாள் ஜனவரி 15வது நாள் என்பதால், அன்றைய தினம் பென்னிகுவிக்குக்கு பொங்கல் வைத்து வழிபடுவதும் வழக்கம். 

 

அந்தளவுக்கு தென்மாவட்ட மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள பென்னிகுவிக்கிற்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர். அதன் பேரில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  அந்தக் கோரிக்கைகளை ஏற்று லோயர் கேம்பில் பென்னிகுவிக்கிற்கு  சிலை வைத்து மணிமண்டபம் கட்டிக் கொடுத்தார். ஆனால் அதை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து இவ்விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

 

ops joins pennycuick birthday function

 

இந்நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ் லோயர் கேம்பில் உள்ள மணி மண்டபத்திற்கு நேற்று சென்று பென்னிகுவிக் படத்திற்கும் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அங்குள்ள புகைப்பட கண்காட்சியைத் துவக்கி வைத்து, முல்லை பெரியார் அணை உருவான வரலாற்றுப்  படங்களைப் பார்வையிட்டார். போடி அருகே உள்ள பாலார்பட்டி கிராம மக்கள் தைப்பொங்கல் விழாவை பென்னிகுவிக் நினைவாகப் பொங்கல் வைத்து அவரை வழிபடுவதை ஆண்டுதோறும் செய்து வருகின்றனர். 

 

அதுபோல் இந்த ஆண்டு பென்னிகுவிக் பிறந்த நாளை அரசு விழாவாக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து பாலார்பட்டியில் மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராகத் துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்டார். அவரை ஊர் மக்கள் தேவராட்டம் சிலம்பாட்டத்துடன் வரவேற்றனர். அப்போது துணை முதல்வர் ஓபிஎஸ் மாட்டு வண்டியை ஓட்டியபடி அப்பகுதிக்கு வந்தார். அதன் பின் பெண்கள் பொங்கலிடும் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார் ஓ.பி.எஸ். 

 

சுற்றுலாத்துறை சார்பில் நடந்த கலைநிகழ்ச்சிகள், பானை உடைப்பு போன்ற போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார் ஓ.பி.எஸ். அப்போது அங்கு கொண்டுவரப்பட்ட குழந்தைகள் 

 

சிலருக்கும் பெயர்களைச் சூட்டினார். வருடந் தோறும் பாலார்பட்டியில் பென்னிகுவிக் பிறந்த நாள் பொங்கல் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம் இந்த ஆண்டு அரசு விழாவாக கொண்டாடப்பட்டதால் இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். இதில் எம்.பி ரவீந்திரநாத் குமார் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் உள்பட மாவட்ட அதிகாரிகள், கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.