ADVERTISEMENT
ADVERTISEMENT
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 144 தடை உத்தரவு மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது ஏற்பட்ட பாதிப்புகளை கண்காணிக்க செல்கிறார். மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது மற்றும் மக்களுடனான சந்திப்பு போன்றவை திட்டமிடப்பட்டுள்ளது. இன்று காலை 144 தடை உத்தரவு திரும்பப்பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Show comments