Skip to main content

கவர்னருடன் மோதும் ஓபிஎஸ்!!

Published on 27/12/2018 | Edited on 27/12/2018

 

ops crashing with the governor

 

வீட்டுவசதித்துறை அமைச்சராகவும், துணைமுதல்வராக இருக்கும் ஓபிஎஸ்க்கு கவர்னருடன் மோதல் ஏற்பட்டுள்ளது. அடுத்த தலைமைசசெயலாளராக வர நினைக்கும் கவர்னரின் செயலாளரான ராஜகோபால் இப்பொழுதே ஐஏஎஸ் அதிகாரிகளை தன் வசம் வைத்திருக்கிறார். வீட்டுவசதித்துறை செயலாளராக இருக்கும் கிருஷ்ணனையும் தனது பிடிக்குள் வைத்திருக்கிறார் கவர்னரின் செயலாளரான ராஜகோபால்.

 

கிருஷ்ணன் ராஜகோபாலின் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் கிருஷ்ணன் ராஜகோபால் சொல்வதை கேட்கிறார். ராஜகோபால் ஓபிஎஸ் கொண்டுவரும் வீட்டுவசதித்துறை விவகாரங்களுக்கு, புதிய லே-அவுட்களுக்கு அனுமதி கொடுக்காதீர்கள் என கிருஷ்ணனுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கிருஷ்ணன் ஓபிஎஸ் கொண்டுவரும் புதிய லே-அவுட்கள் மற்றும் வீட்டுவசதித்துறைக்கு உட்பட்ட விவகாரங்கள் மற்றும் அரசாங்க வீடு ஒதுக்கீடு ஆகியவற்றை ஏற்க மறுக்கிறார்.

 

 

ops crashing with the governor

 

இப்படி ஓபிஎஸ் கொண்டுவரும் அனைத்து சிபாரிசுகளையும் கிருஷ்ணன் நிராகரிக்கிறார். இதனால் கிருஷ்ணனுக்கும் ஓபிஎஸ்க்கும் இடையே மோதல் முற்றியுள்ளது. இந்தநிலையில் பிரச்சனையை எடப்பாடியிடம் கொண்டு சென்றிருக்கிறார் ஓபிஎஸ். ஆனால் எடப்பாடியோ இவையெல்லாம் கவர்னரின் செயலாளரான ராஜகோபாலனின்  திருவிளையாடல்கள் எனவே தடுக்க முடியாது என கழண்டுவிட்டார்.

 

 

 

இதனால் ராஜகோபாலுக்கும் ஓபிஎஸ்க்கும் இடையே மோதல் முற்றியுள்ளது. ராஜகோபாலுக்கும், ஓபிஎஸ்க்கும், வீட்டுவசதித்துறை செயலாளர் கிருஷ்ணனுக்கும் இடையே நடக்கும் இந்த முக்கோண மோதலில் கவர்னருடைய அந்தரங்க விஷயங்களை அறிந்தவர் ராஜகோபால் என்பதால் கவர்னர் ராஜகோபாலை ஆதரிக்கிறார். கிருஷ்ணனை எனது துறையில் இருந்து நீக்க வேண்டும் என கொடிபிடிக்கிறார் ஓபிஎஸ். அதேபோல் கவர்னரின் செயலாளரான ராஜகோபாலோ கிருஷ்ணன் அதே துறையில்தான் நீடிக்க வேண்டுமென ஓபிஎஸ் உடன் மல்லுக்கட்டுகிறார். 

 

ராஜகோபால், கவர்னர்,கிருஷ்ணன், ஓபிஎஸ் என  இப்படி நடக்கும் மோதல் அடுத்து எங்கு போய் முடியும் என தெரியவில்லை. ராஜகோபால், கவர்னர், கிருஷ்ணன் இந்த மூவரையும் எதிர்த்து எடப்பாடியிடம் கடுமையாக பேசியிருக்கிறார் ஓபிஎஸ்.

 

எடப்பாடியும் தன்னால் ஒன்றும் செய்ய இயலாது என கைவிரித்திருக்கிறார். இந்த மோதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வட்டாரத்தில்  பரபரப்பாக பேசப்படுகிறது.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

அமைச்சரை பதவி நீக்கம் செய்ய மேற்கு வங்க ஆளுநர் வலியுறுத்தல்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
West Bengal Governor insists on dismissing the minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்ட்டி மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டார். அப்போது தேர்தலில் போட்டியிடும் 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் மம்தா பானர்ஜி அறிமுகம் செய்திருந்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜியும் அக்கட்சியினரும் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் ஆனந்த் போஸ் மேற்கு வங்க அரசை வலியுறுத்தியுள்ளார். அதே சமயம் ஆளுநர் ஆனந்த் போஸ் அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதாக அமைச்சர் பிரத்யா பாசு பதிலடி கொடுத்துள்ளார்.