Skip to main content

"தமிழ் திருநாட்டின் திருமகள் தமிழிசை"- ஓ.பி.எஸ். புகழாரம்!

Published on 16/12/2019 | Edited on 16/12/2019


கோவை மாவட்ட இரும்பு வியாபாரிகள் சங்கத்தின் பவளவிழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தெலங்கானா ஆளுநர் தமிழிசை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

 

ops about Tamilisai

 



உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகையில், "தமிழிசை குடும்பம் பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பம். ஆனால் தமிழிசை பாஜகவில் சேர்ந்து, எடுத்த கொள்கையில் உறுதியோடு இருந்து, இந்த நிலைக்கு வந்து உள்ளார்.முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழிசை வெற்றி பெற்றிருந்தால் மத்திய அமைச்சராகி தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருப்பார். துணிச்சலாக பேசக்கூடிய தமிழிசை, ஜெயலலிதாவின் அன்பை பெற்றவர். இதற்கு முன்னால் எத்தனையோ அரசுகள் இருந்துள்ளது. ஆனால் இந்த 5 ஆண்டுகளில் 50 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு திட்டங்கள் செய்யப்பட்டு உள்ளது" என்றார். 

இதைத்தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், "இரும்பு என்று சொன்னால் வலிமை, சக்தி, உறுதி என்று பொருள். மாநிலங்களை ஒருங்கிணைக்க முயற்சி செய்த சர்தார் வல்லபாய் பட்டேல் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகிறார். அதே போல தமிழகத்தில் நடைபெற்ற ஊழல் ஆட்சிகளை அடக்கி ஒடுக்கியவர் ஜெயலலிதா. அதனால் தான் இரும்பு பெண்மணி என்று ஜெயலலிதா அழைக்கப்படுகிறார். ஆளுநர் தமிழிசை நீண்ட அரசியல் பாரம்பரியத்திலிருந்து வந்தவர். கட்சி விசுவாசம் மற்றும் கடுமையான உழைப்பால் உயர்ந்த பதவியை தமிழிசை அடைந்துள்ளார். தமிழ் திருநாட்டின் திருமகள் தமிழிசை" என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய ஆளுநர் தமிழிசை," பிறந்த வீடின் பலமும் எனக்கு உள்ளது, புகுந்த வீட்டின் பலமும் இருக்கிறது. அதனால் தான் ஆளுநர் ஆகி உள்ளேன். அனைவருக்கும் தெரியும் நான் பாஜக தலைவராக அறிவிக்கப்பட்ட உடன் சில நிமிடங்களில் தகவல் அழைப்பாளர் அனுப்பி வாழ்த்து கடிதம் அனுப்பியது ஜெயலலிதா. இன்னொரு கட்சி தலைவரை ஜெயலலிதா வாழ்த்தியது, வாழ்த்து கடிதம் பெற்றது நான் ஒருவராக தான் இருக்க முடியும்.  மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தான் இறைவன் ஆளுநர் பதவியை தந்துள்ளான். பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் வழங்கும் தமிழக அரசு திட்டத்தை, தெலுங்கானா ஏற்று கொண்டு செயல்படுத்தி வருகிறது" என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

“விதிமுறைகள் மாறி விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tamilisai soundararajan says Rule is changed into a holiday for lok sabha election

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

தமிழகத்தில் நேற்று இறுதி நிலவரப்படி, 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த தேர்தலை விட 3 சதவீத வாக்குகள் குறைந்து பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக தென் சென்னை பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “வெள்ளிக்கிழமையில் தேர்தல் நடத்துகிறார்கள். 3 நாள்கள் விடுமுறை வந்ததால் வாக்கு சதவீதம் குறைந்து விடுகிறது. வாக்களிக்க வேண்டும் என்ற விதிமுறையே மாறி அது விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது. தொடர் விடுமுறையால் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது கவலை அளிக்கிறது. 

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் தேர்தல் நாளை அறிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் நான் ஏற்கெனவே கோரிக்கை வைத்தேன். ஏனென்றால், அன்று தேர்தல் நடத்தினால் அதை விடுமுறையாக எடுத்துக் கொண்டு போகிறார்கள். அதனால், வார நாட்களில் தேர்தல் நடத்த கோரிக்கை வைக்கிறேன். அதை பரிசீலித்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.