ADVERTISEMENT

‘அதிமுக எம்.பி ஓ.பி.ஆர் வெற்றி செல்லாது’ - உயர்நீதிமன்றம்

02:55 PM Jul 06, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வாக்காளர் மிலானி என்பவர் 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருந்தார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் வழங்கிய தீர்ப்பில் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என உத்தரவிட்டுள்ளார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தீர்ப்பை நீதிபதி நிறுத்தி வைத்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களில் ஓ.பி.ரவீந்திரநாத் மட்டுமே வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT