Skip to main content

ஓபிஆர் கார் கண்ணாடி உடைப்பு.! போடி தொகுதியில் பரபரப்பு!!

Published on 06/04/2021 | Edited on 06/04/2021

 

O.P.R. Car glass break.


தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரில், அ.தி.மு.க சார்பில் ஓ.பன்னீர்செல்வமும், தி.மு.க சார்பில் தங்கத் தமிழ்ச்செல்வனும் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது போலவே, இன்று மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்த ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வந்தனர். 

 

பெரியகுளத்தில் உள்ள தனியார்ப் பள்ளியில் ஓ.பன்னீர்செல்வம், வாக்களித்தார். அவருடன் தாயார் பழனியம்மாள், மனைவி விஜயலெட்சுமி, மகன் ஜெயபிரதீப், அவரது மனைவி ஆர்த்தி, தேனி எம்.பி ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி ஆகியோர் வந்து வாக்களித்தனர். இந்நிலையில், ரவீந்திரநாத் மட்டும் தனியாக வந்து அதே வாக்குச் சாவடியில் வாக்களித்துவிட்டு, பெரியகுளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிக்குச் சென்று, கட்சியினரிடம் ஆலோசனை செய்தார்.

 

தொடர்ந்து போடி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு வரிசையாகச் சென்ற அவர், கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். அந்த வகையில், போடி அருகே உள்ள பெருமாள் கவுண்டன்பட்டிக்குச் சென்ற ரவீந்திரநாத்தின் கார் மீது சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில், அவரது கார் கண்ணாடி உடைந்தது. அதனைக் கண்ட அ.தி.மு.க'வினர், கல்வீச்சில் ஈடுபட்ட நபர்களை துரத்தியடித்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ரவிந்திரநாத் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார். 

 

காரில் ரவீந்திரநாத் இல்லாததால், அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. யார் கல்வீச்சில் ஈடுபட்டது என விசாரித்தோம். "அ.ம.மு.க'வினர் சிலர் தான் இந்த கல்வீச்சு தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். எல்லோரும் ஒரே கட்சியில் இருந்து, ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இப்போது பிரிந்து வெவ்வேறு கட்சியாக இருக்கிறார்கள். அதனால், அ.தி.மு.க'வினரால் எதுவும் செய்யமுடியவில்லை. கல்வீச்சில் ஈடுபட்டவர்களை விரட்ட மட்டுமே செய்யதனர்" என்றனர் பெருமாள் கவுண்டன்பட்டி வாசிகள்.

 

இதுதொடர்பாக போடி தி.மு.க வேட்பாளர் தங்கத் தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது, “ரவீந்திரநாத்தின் பாதுகாவலர்களுக்கும், அ.ம.மு.க'வினருக்கும் இடையே தான் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அங்கிருந்த தி.மு.க நிர்வாகிகள் சமாதானம் செய்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்திற்கும் தி.மு.க'விற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தவறான செய்தி வருகிறது. யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.