ADVERTISEMENT

'ஒடுக்கப்பட்ட பெண்களும், அரசியல் எழுச்சியும்' -கருத்தரங்கு

09:13 PM Oct 21, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

அரசியல் அதிகாரம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பரவலாக்கப்பட வேண்டும், ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் அரசியலாய் அணி திரள்வோம்! அதிகாரத்தை வென்றெடுப்போம்! என்ற முழக்கத்தோடு ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு திருச்சி ஜி கார்னரில் இன்று காலை (அக்.21) தொடங்கியது.

ADVERTISEMENT


மாநாட்டின் முதல் நிகழ்வாக காந்தியடிகள் அரங்கில் 'நெருக்கடிக்குள்ளாகும் மதச்சார்பின்மையும், அரசியல் எழுச்சிக்கான தேவையும்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரத்தினம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலைக்கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் கு.இராமகிருட்டிணன், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம், தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், ஜமாத்தே இஸ்லாமிய ஆலோசனை குழு உறுப்பினர் ஜலாலுதீன், தமிழ் தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன், கிருஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிக்கோ இருதயராஜ், மே17 இயக்கத்தின் அருள் முருகன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் காலித் முகமது, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் ஆபிருதீன் மன்பயி ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியின் இறுதியாக மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் நன்றியுரையாற்றினார்.

அதேபோல் முற்போக்கு பத்திரிக்கையாளர் கெளரிலங்கேஷ் அரங்கத்தில் 'ஒடுக்கப்பட்ட பெண்களும், அரசியல் எழுச்சியும்' என்ற தலைப்பில் பெண்களுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விமன் இந்தியா மூமெண்ட் மாநில துணைத் தலைவர் பாத்திமா கனி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் உம்முல் தெளலத்தியா வரவேற்புரையாற்றினார். விமன் இந்தியா மூமெண்ட் மாநில தலைவர் நஜ்மா பேகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நசரத் பேகம், அக்தரி பேகம், நசீமா, ஃபரீதா, ஆமினா, ஷம்சாத், ஹாலிதா, மெஹருன்னிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா, மாநில பொருளாளர் வி.எம்.அபுதாகிர், மாநில செயலாளர் சஃபியா நிஜாம், நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநில துணைத் தலைவர் ரஜியா பானு, அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரிய உறுப்பினர் பாத்திமா முஸஃப்பர், எழுத்தாளர் பேராசிரியை சாந்தி, விமன் இந்தியா தேசிய தலைவர் மெஹரின்னிஷா கான், தேசிய செய்ற்குழு உறுப்பினர் வழ.சாகிரா ராஜா முகமது, விமன் இந்தியா மாநில தலைவர் நஜ்மா பேகம் ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியின் இறுதியாக மாநில செயற்குழு உறுப்பின சஃபியா நன்றியுரையாற்றினார். இந்த கருத்தரங்கு நிகழ்ச்சிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து மதியம் 2:30 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைஜி, தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, மாநில தலைவர் நெல்லை முபாரக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சு.திருநாவுக்கரசர், விசிக தலைவர் தொல் திருமாவளவன், புதுச்சேரி மாநில கங்கிரஸ் தலைவரும் புதுவை மாநில பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம், தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், ஆரிய சமாஜ்அமைப்பின் தலைவர் சுவாமி அக்னிவேஷ், அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர்முகமது இஸ்மாயில் நாம் அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பர், ஜமாத்துல் உலமா சபையின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் டி.ஜே.எம். சலாஹுத்தின்ரியாஜி மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர்கள் உள்பட பலர் உரையாற்றுகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT