Skip to main content

மணல் குவாரி திறக்க எதிர்ப்பு! தி.மு.க. எம்.எல்.ஏ. தலைமையில் ஆற்றில் கிராம மக்கள் போராட்டம்! 

Published on 18/11/2020 | Edited on 18/11/2020


 

Opposition to open sand quarry! DMK MLA leads river villagers on ground

 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே எலந்தம்பட்டு, காமாட்சிப்பேட்டை ஆகிய கிராமங்களையொட்டி கெடிலம் ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த பகுதியில் மணல் குவாரி அமைப்பதற்கு அரசு அதிகாரிகள் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஆயத்தப் பணிகளை தொடங்கினர். ஆனால் மணல் குவாரி அமைத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்,  நிலத்தடி நீர்மட்டம் குறையும், விவசாயம் பாதிக்கப்படும் எனக் கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

அதேசமயம் அரசு அதிகாரிகள் மணல் குவாரி அமைப்பதற்கான ஆயத்த பணிகளை கடந்த இரு நாட்களாக தீவிரப்படுத்தி வருகின்றனர். மணல் அள்ளி செல்லும் வாகனங்கள் செல்வதற்கான வழிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் சரி செய்தனர்.  

 

இந்த நிலையில் மணல்குவாரி அமைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து தகவல் அறிந்த நெய்வேலி சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் சபா ராஜேந்திரன், பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சபா.பாலமுருகன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட அமைப்பாளர் வெங்கடசாமி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய செயலாளர் தேவராசு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Opposition to open sand quarry! DMK MLA leads river villagers on ground


அதையடுத்து தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற டி.எஸ்.பி. பாபு பிரசாந்த் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அதேசமயம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் போராட்டத்திற்கு வராததை கண்டித்து ஆற்றில் குடியேறும் போராட்டம் நடத்துவோம் என எம்.எல்.ஏ. சபா.பாலமுருகன் அறிவித்தார். மேலும் கிராம மக்கள் போராட்டத்தை பங்கேற்பதற்காக திரண்டு வந்தனர். அவர்களை காவல்துறையினர் வழியிலேயே தடுத்து நிறுத்தினர்.  

 

இதனிடையே சுரங்கத் துறை பொறியாளர்கள் ஆற்றுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. கெடிலம் ஆற்றில் மணல் அள்ளுவதில்லை என உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். அதன்பின்னர் அங்கு வந்த வட்டாட்சியர் பிரகாஷ், 'கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி அதன் பின்னர் முடிவு செய்யலாம்' என்றும், 'அதுவரை மணல்குவாரி இயங்காது என்றும் உறுதியளித்தார். அதையடுத்து போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ஏ-வும் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும் ஆற்றில் இறங்கி மக்களுடன் போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.