நீட் தேர்வை இரத்து செய்யக்கோரி சென்னை அன்பகத்தின் முன்பாக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
கரோனா காலத்தின் முடக்கத்தால் மாணவர்கள் மன உளைச்சலில் இருப்பதாகவும், குடும்ப சூழ்நிலை காரணமாக அவர்களால் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியாத நிலை இருப்பதாலும் இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும்படியும் அதேபோல் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தகோரியும் போராட்டம் நடைபெற்றது.