Skip to main content

‘ஆபரேஷன் பாகுபலி’ தள்ளி வைப்பு.. மனித நடமாட்டத்தை அறிந்து இருப்பிடத்தை மாற்றும் யானை..!

Published on 29/06/2021 | Edited on 29/06/2021

 

‘Operation Bahrubali’ postponed .. The elephant that changes location knowing the human movement ..!

 

கோவை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் அட்டகாசம் செய்துவரும் காட்டு யானையான பாகுபலியைப் பிடிக்க வேண்டுமென வனத்துறையினர் முடிவுசெய்தனர். அதற்காக, டாப்சிலிப்பிலிருந்து கலீம், மாரியப்பன், வெங்கடேஸ் என்ற 3 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டு, மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கில் நிறுத்திவைத்தனர்.

 

அந்தக் கும்கி யானைகள் உதவியுடன் பாகுபலியைப் பிடித்து அதன் தலையில் ஜி.பி.எஸ். ரேடியோ காலர் பொருத்தி, நடவடிக்கையைக் கண்காணிக்க வனத்துறையினர் முடிவு செய்திருந்தனர். இதனிடையே மண்டல தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் உத்தரவின் பேரில், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் அறிவுறுத்தலின்படி, ஒரு வனவர், 5 வனக்காவலர்கள் அடங்கிய 7 தனிக்குழுக்கள் மற்றும் வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையிலான 5 பேர் கொண்ட மருத்துவக் குழுவும் அமைக்கப்பட்டன.

 

இந்த நிலையில், வனக்குழுவினருக்கு நேற்று (28.06.2021) பாகுபலி, மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வேடர் காலனி பகுதியில் சுற்றித்திரிவதாக செய்திவந்தது. உடனே வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றதையடுத்து பாகுபலி யானை தனது பாதையினை மாற்றி வனத்துறையினருக்குப் போக்கு காட்டியது. இருப்பினும் யானையைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.

 

2வது நாளாக இன்றும் பாகுபலியை தேடும் பணியில் வனத்துறையினர் மற்றும் மருத்துவத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் பாகுபலி மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரகங்கள் என அடிக்கடி தனது இடத்தை மாற்றிக்கொண்டிருப்பதால் யானையைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

 

இதனையடுத்து ‘பாகுபலி ஆபரேஷன்’ தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், “பாகுபலி யானை கடந்த 5 நாட்களாக வனப்பகுதியைவிட்டு வெளியே வரவில்லை. நேற்று வேடர் காலனி அருகில் வந்தது குறித்து அறிந்து அங்கு சென்றபோதும் யானை வன எல்லையைவிட்டு வெளியில் வரவில்லை.

 

இந்தநிலையில், 2வது நாளாக இன்றும் மருத்துவக் குழுவினரும் வனக்குழுவினரும் தொடர்ந்து கண்காணித்துவந்த நிலையில் மனிதர்களுடைய நடமாட்டத்தை அறிந்துகொண்டு மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குள் இருந்து சிறுமுகை வனப்பகுதிக்குள் என அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக்கொள்வதால், அதனைக் குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைக்கும் பணியில் ஈடுபட்ட வனக்குழுவினரையும் தாக்கவும் முற்பட்டுள்ளது.

 

இதனால் பாகுபலியினை மேலும் துன்பப்படுத்தாமல் இருப்பதற்காக அடுத்த 10 நாட்கள் தீவிர கண்காணிப்புக்குப் பின்னர் ‘ஆபரேஷன் பாகுபலி’ மீண்டும் தொடரும். இந்த 10 நாட்களும் கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கிலேயே நிறுத்திவைக்கப்படும்” என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த துயரம்; நொடிப் பொழுதில் நடந்த சம்பவம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Son passed away in front of mother eyes

கோவை மாவட்டம், சாய்பாபா காலனி அருகே அமைந்துள்ளது கருப்புசாமி வீதி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் ஆனந்த். இளைஞரான இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அதனால், மிகுந்த கவனமுடன் குடும்பத்தினர் ஆனந்தை அரவணைப்புடன் வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆனந்திற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி இரவு ஆனந்தின் தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா இணைந்து ஆனந்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்றுள்ளனர். அப்போது, ஆனந்த் தாய் மற்றும் பாட்டியின் கையை விட்டு நடந்து சென்றுள்ளார். குடும்பத்தினரும் ஆனந்த் சரியாக நடந்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் கூடவே நடந்துச் சென்ற நிலையில், திடீரென ஆனந்த் அவ்வழியே வந்த துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்ற பேருந்தின் முன்பாக பாய்ந்துள்ளார்.

நொடிப் பொழிதில், ஆனந்த் பேருந்து முன் பாய தாய் மற்றும் பாட்டியின் கண் முன்னே  தனியார் பேருந்தின் முன் பகுதியில் சிக்கியுள்ளார். இதில், பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மகன் தடுமாறி விழுந்து கண்முன்னே உயிரிழந்ததைப் பார்த்த தாய்  லட்சுமி நடுரோட்டில் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து நடந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், உடல் நிலை சரியில்லாத ஆனந்தை அவரது தாய் மற்றும் பாட்டி சாலையின் ஓரத்தில் நடந்து கூட்டிச் செல்கின்றனர். அப்போது, திடீரென் அவ்வழியாக தனியார் பேருந்து வந்துள்ளது. அதில், திடீரென ஆனந்த் பாய்கிறது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், தனியார் பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு வண்டியை திருப்பி பிரேக் அடித்துள்ளார். ஆனாலும், யாரும் எதிர்பாராத வகையில் தனியார் பேருந்தின் முன் சக்கரம் ஏறியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்கள் மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாத இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து முன்பு பாய்ந்து விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாயின் கண்முன்னே விபத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அர்ச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 27/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.