Skip to main content

உத்தரவை மீறி இயங்கிய தோல் தொழிற்சாலை... மிஷின்களுக்கு சீல் வைப்பு!!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020

கரோனோ வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகளானது தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் பேரணாம்பட்டு பகுதியில்  தோல் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. தோல் பொது சுத்திகரிப்பு மையமானது தோல் தொழிற்சாலைகளிடமிருந்து தோல் கழிவுநீரை வாங்காமல் நிறுத்தி வைத்தது.


வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு பகுதியில் அரசின் 144 தடை உத்தரவை  பின்பற்றாமல் ஒரு சில தோல் தொழிற்சாலைகள் மட்டும் தொழிலாளர்கள் வைத்து இயக்கப்பட்டுவருவதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்து தொழிலாளர் நலத்துறைக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் தகவல் சென்றது. அவர்கள் இதனை கண்காணிப்பது எங்கள் வேலையில்லை என தட்டிக்கழித்துள்ளனர். அதன்பின்னர் மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் அனுப்பியுள்ளனர்.

 

leather


கடந்த மார்ச் 28ந் தேதி அன்று பேரணாம்பட்டு பகுதியில், தாசில்தார் முருகன் தலைமையில் அதிகாரிகள் தோல் தொழிற்சாலைகளை ஆய்வு செய்தபோது ஒரு தோல் தொழிற்சாலை தொழிலாளர்களை வைத்து தோல் பதனிடப்பட்டது தெரிய வந்தது. அந்த நிறுவனத்துக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் பணியை நிறுத்தியது அந்த நிறுவனம்.
 

nakkheeran app



அந்த நிறுவனம் தோல் தொழிற்சாலையின் தோல் கழிவுநீரை கடந்த சில தினங்களாக சுத்திகரிக்காமல் அப்படியே திறந்து வெளியேற்றியதால் அந்த நிறுவனம் அமைந்துள்ள சாலைப்பேட்டை பகுதியில் அந்த கெமிக்கல் கழிவு நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசியது. அதோடு பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதுப்பற்றி மீண்டும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கவனத்துக் கொண்டு சென்றனர். மீண்டும் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர்.

 

leather


இதனையடுத்து சுற்றுசூழல் மாசு கட்டுப்பாடு உதவி பொறியாளர் நித்தியலட்சுமி தலைமையில், தாசில்தார் முருகன்  உள்பட அதிகாரிகள் தோல் தொழிற்சாலைக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினர். ஆய்வில் தோல் தொழிற்சாலையிலிருந்து கழிவு நீர் சுத்திகரிக்காமல் வெளியேற்றியது தெரிய வந்ததது. இதனையடுத்து அங்குள்ள மொத்தம் 16  இயந்திரங்களுக்கு சுற்றுசூழல் மாசு கட்டுப்பாடு உதவி பொறியாளர் நித்ய லட்சுமி, தாசில்தார் முருகன் ஆகியோர் சீல் வைத்துவிட்டு சென்றுள்ளனர். 

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்