ஆந்திராவின் அம்மபள்ளியில் உள்ள கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் வினாடிக்கு 300 கன அடி நீர் திறக்கப்பட்டுளள்து.
இதனால் கொசஸ்தலை ஆற்றில் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து ஆந்திர அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் நாளை காலை 11.00 மணியளவில் பூண்டி நீர்த்தேக்கம் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.